செய்திகள் :

மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி! -ராகுல் காந்தி

post image

‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(பிப். 3) மக்களவையில் குறிப்பிட்டு பேசினார்.

அவர் பேசியதாவது; “‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தை பிரதமர் முன்மொழிந்தார்... இது ஒரு சிறந்த யோசனைதான்... அதேவேளையில் அதனால் விளைந்திருக்கும் பலன்களை நம் கண்முன் இப்போது கண்டுகொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) கடந்த 2014-ஆம் ஆண்டு 15.3 சதவிகிதமாக இருந்தது, ஆனால், ஜிடிபி இன்று 12.6 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. இது, கடந்த 60 ஆண்டுகளில் உற்பத்தி துறையிலிருந்து இதுவரை கிடைக்கப்பெறாத மிகக்குறைந்த பங்களிப்பாகும்.

இதற்காக பிரதமரை குற்றஞ்சாட்டவில்லை. அவர் எந்தவொன்றையும் முயற்சிக்கவில்லை என்றும் சொல்லவில்லை. அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது” என்றார்.

2024-இல் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள்: மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட விமான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் சிவில் விமானப் போக்... மேலும் பார்க்க

தில்லியில் பிரசாரம் நிறைவு! மும்முனைப் போட்டியில் வெல்வது யார்?

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றது. டிச. 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும் பார்க்க

மகா கும்பமேளா: வசந்த பஞ்சமியையொட்டி 1.25 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் முக்கிய நாளான வசந்த பஞ்சமி புனித நீராடல் இன்று(பிப். 3) நடைபெறுகிறது. வசந்த பஞ்சமி மற்றும் அதற்கு முந்தைய இருநாள்களில... மேலும் பார்க்க

ஒரே நாடு.. பிரித்துவிடாதீர்கள்: மக்களவையில் கனிமொழி பேச்சு

புது தில்லி: ஒரே நாடு சிதைத்துவிடாதீர்கள் என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் கூறினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வ... மேலும் பார்க்க

பிரதமரை டிரம்ப் ஏன் அழைக்கவில்லை?- மக்களவையில் ராகுல் சர்ச்சைப் பேச்சு

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அமெரிக்கப் பயணம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினரைக் காக்கத் தவறிய மத்திய அரசு: மக்களவையில் கனிமொழி

புது தில்லி: நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என்று மக்களவையில் திமுக எம்.பி. க... மேலும் பார்க்க