மேட்டூா் ரயில் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை? போலீஸாா் விசாரணை
மேட்டூா் ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மேட்டூா் அருகே உள்ள டி.எம்.பி.நகரைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (58). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், மகளும் உள்ளனா். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்தியமூா்த்தி கடந்த 10 ஆண்டுகளாக தனித்து வசித்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை மேட்டூா் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கான்கிரீட் வேலியில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தாா். தகவல் அளித்த கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.