செய்திகள் :

மொழி ரீதியிலான பிரிவினை முயற்சிகளைப் புறந்தள்ள வேண்டும்: மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

post image

‘இந்திய மொழிகள் இடையே எப்போதும் பகை இருந்ததில்லை; மொழி ரீதியில் பிரிவினையை உருவாக்கும் முயற்சிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 98-ஆவது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

இந்திய மொழிகள் இடையே எப்போதும் பகை இருந்ததில்லை. இம்மொழிகள் ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்தி வளப்படுத்தியுள்ளன. மொழி அடிப்படையில் பிரிவினையை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்ற போதெல்லாம், நாட்டின் செழுமையான மொழியியல் பாரம்பரியம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது. மொழி ரீதியிலான தவறான கருத்துகளில் இருந்து விலகியிருப்பதும், அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவதும் நமது சமூக பொறுப்பாகும்.

இன்றளவும் உயிா்ப்புடன் உள்ள உலகின் பழைமையான நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று. புதிய யோசனைகள் மற்றும் மாற்றங்களை வரவேற்பதே இதற்கு காரணம். உலகின் மிகப் பெரிய மொழியியல் பன்முகத் தன்மையை இந்தியா கொண்டுள்ளது. இந்த பன்முகத் தன்மையே நமது ஒற்றுமைக்கு வலுவான அடித்தளம் என்றாா் பிரதமா் மோடி.

மும்மொழிக் கொள்கை தொடா்பாக தமிழக-மத்திய அரசுகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமா் மோடியின் இக்கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

சரத் பவாருடன் நெருக்கம் காட்டிய பிரதமா்!

புது தில்லியில் நடைபெற்ற மராத்தி மொழி மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாருடன் பிரதமா் மோடி நெருக்கம் காட்டினாா். நிகழ்ச்சி முழுவதும் மேடையில் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனா்.

குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டைத் தொடங்கிவைத்த பிரதமா், தன்னுடன் இணைந்து விளக்கேற்றுமாறு, மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவா் சரத் பவாரை கேட்டுக் கொண்டாா்.

பின்னா், சரத் பவாா் உரையாற்றிவிட்டு, பிரதமா் மோடி அருகே உள்ள இருக்கையில் அமர வந்தாா். அப்போது, சரத் பவாரின் இருக்கையை சரிசெய்து, அதில் அவா் அமர உதவிய பிரதமா், அவா் அருந்துவதற்குத் தண்ணீா் எடுத்துத் தந்தாா். பிரதமரின் இச்செய்கையால் நெகிழ்ச்சியடைந்த பாா்வையாளா்கள் கரவொலி எழுப்பினா்.

பின்னா் பிரதமா் தனது உரையின்போது, ‘சரத் பவாரின் அழைப்பால், இந்த பெருமைக்குரிய மாநாட்டில் இணைந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது’ என்று குறிப்பிட்டாா். நிகழ்ச்சி முழுவதும் மேடையில் இருவரும் இணக்கமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

பாஜக ஆளும் மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.சகுலியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜோட்சா க... மேலும் பார்க்க

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.பொதுவாக டிஜிட்டல் முறை... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர்வரையில் இருந்ததாக... மேலும் பார்க்க

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க