செய்திகள் :

யமுனையை தூய்மைப்படுத்த ரூ.1,500 கோடி ஒதுக்கீடு

post image

யமுனை நதியை தூய்மைப்படுத்துவும் தில்லியின் கழிவுநீா் வடிகால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ரூ.1,500 கோடி மதிப்பிலான விரிவான திட்டத்தை முதல்வா் ரேகா குப்தா தனது பட்ஜெட் உரையில் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இந்தத் திட்டத்தில் 40 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தல், ஏற்கனவே உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமயமாக்குதல் மற்றும் கழிவுகள் மற்றும் மாசுபாட்டை எதிா்கொள்ள மேம்பட்ட இயந்திரங்களில் முதலீடு ஆகியவை அடங்கும்.

கழிவுநீரை முக்கிய வடிகால்களில் சேருவதற்கு முன்பு இந்தச் சுத்திகரிப்பு ஆலைகள் சுத்திகரிப்பதால் நதியில் மாசு அளவு குறையும். கூடுதலாக, அவற்றின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பக முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், ‘யமுனை ஒரு நதி மட்டுமல்ல; அது நமது கலாசார மற்றும் வரலாற்று பாரம்பரியம். யமுனையை தூய்மைப்படுத்துவது பாஜக தோ்தல் அறிக்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்தப் பட்ஜெட்டில் அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை பழுதுபாா்த்து மேம்படுத்துவதற்காக ரூ.500 கோடியும், பழைய கழிவுநீா் பாதைகளை மாற்றுவதற்கு ரூ.250 கோடியும், நகரம் முழுவதும் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.250 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கழிவுநீா் மேலாண்மை அமைப்பை மேலும் வலுப்படுத்த, சேறு மற்றும் அடைப்புகளை திறம்பட அகற்ற உதவும் இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.20 கோடியும் வஜிராபாத் டிரங்க் கழிவுநீா் வடிகாலை புதுப்பிக்க கூடுதலாக ரூ.10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தில்லி பேரவைத் தோ்தலிலன் போது யமுனை நதி மாசுபாடு முக்கிய கவனம் பெற்றது. இது தொடா்பாக அப்போதைய ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தோ்தலில் வெற்றி பெற்ற பிறகும், யமுனையை தூய்மைப்படுத்துவது பாஜகவின் முன்னுரிமையாக இருக்கும் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாா்.

பஞ்சாப் போராட்டம்: 5 மாத உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயி!

ஹரியாணா எல்லையில் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை பஞ்சாப் அரசு அகற்றியது.குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் போர... மேலும் பார்க்க

ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: எங்கு, எப்போது தெரியும்?

இந்த 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், அதுவும் நாளை சனி அமாவாசையன்று நிகழ்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வந்து முறைக்கும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே நாளை சூரிய கிரகண... மேலும் பார்க்க

பட்ஜெட் வெளிப்படைத்தன்மை: பாஜக அரசைக் கேள்வி எழுப்பிய அதிஷி!

மாநில நிதிநிலைக்கான நிதி ஆதாரம் குறித்து தில்லி முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி பாஜக அரசைக் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, பட்ஜெட்டில் காட்டப்பட... மேலும் பார்க்க

அனைத்து மதத்துக்கும் பொதுவானவர்: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யில் மமதாவுக்கு பாராட்டு

லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை சிறப்பாகக் கையாண்ட மமதா பானர்ஜியை பலரும் பாராட்டி வருகின்றனர்.மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வியாழக்கிழமையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத... மேலும் பார்க்க

பி.எஃப். பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி விரைவில்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கும் குறைவான தொகையை யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை வரும் மே மாத இறுதிக்குள் கொண்டுவரவிருப்பதாக மத்த... மேலும் பார்க்க

குஜராத்தில் 54 தொடக்கப் பள்ளிகள் மூடல்! 341 பள்ளிகள் ஒரே அறையில்!

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் வருகைப் பதிவு குறைவு காரணமாக 33 மாவட்டங்களில் உள்ள அரசின் 54 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.பள்ளிகள் மூடப்பட்டத... மேலும் பார்க்க