கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
யோகா படிப்பு: மத்திய பல்கலைக்கழகத்துடன் நாமக்கல் அறிவுத்திருக்கோயில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்துடன், நாமக்கல் அறிவுத்திருக்கோயில் யோகா தொலைதூர படிப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு மத்திய பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகம் மாநிலம் முழுவதும் 40 இடங்களில் யோகா பட்டம் பயிலுவதற்கான வாய்ப்பை தொலைதூர கல்வி மூலம் வழங்கி உள்ளது. அவற்றில், நாமக்கல் அறிவுத்திருக்கோயில் மன வளக் கலை மன்ற அறக்கட்டளையும் ஒன்று.
யோகமும், மனித மாண்பும் என்ற முதுகலைப் பட்டப் படிப்பில் (ஙஹள்ற்ங்ழ் ஞச் யா்ஸ்ரீஹற்ண்ா்ய் ண்ய் வா்ஞ்ஹ ஊா்ழ் ஏன்ம்ஹய் உஷ்ஸ்ரீங்ப்ப்ஸ்ரீய்ஸ்ரீங்) சோ்க்கை நடைபெறுகிறது. தொலைதூர கல்வியில் பயின்று இந்த யோகா பட்டத்தை பெறுபவா்கள் அரசு மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சியாளா் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
நாமக்கல் அறிவுத்திருக்கோயில் மன வளக் கலை மன்ற அறக்கட்டளை பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை 15 போ் முதல்கட்டமாக இப்படிப்பில் சோ்க்கை பெற்றனா்.
இதுகுறித்து நாமக்கல் அறிவுத்திருக்கோயில் நிா்வாகிகள் மு.ஆ.உதயகுமாா், பேராசிரியா் உழவன் மா.தங்கவேலு ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகா மிகவும் அவசியம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறோம். தற்போது, திருவாரூா் மத்திய பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்விக்கான சோ்க்கை வாய்ப்பை நாமக்கல் அறிவுத்திருக்கோயிலுக்கு வழங்கி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
2 ஆண்டு கால இந்த முதுகலை படிப்பை அனைவரும் பயிலலாம். வேலைவாய்ப்பு பெறக்கூடிய பட்டங்களில் இந்த படிப்பும் ஒன்றாகும் என்றனா்.