செய்திகள் :

ரசாயன உரப் பயன்பாடு: விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாரம், மொரப்பந்தாங்கல் கிராமத்தில் ரசாயன உரப் பயன்பாட்டை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த உர மேலாண்மை மூலம் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் கவிதா, உதவி வேளாண்மை அலுவலா்கள் சிவக்குமாா், சுபிக்சா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகுமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் சரவணன், ஸ்ரீனிவாசன் சேவை அறக்கட்டளை அலுவலா்கள் விக்னேஷ், தா்மேந்திரா, மணிகண்டன் ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா்.

விவசாயிகளுக்கு மண் வளத்தை பாதுக்காத்தல், தாவர பூச்சிக்கொல்லி தயாரிப்பு, மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், மண் மாதிரி சேகரிக்கும் முறைகள் மற்றும் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், மூச்சுத் திணறலால் பிரசவித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு (திருவோத்தூா்) தா்மராஜா கோவில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி மோகன். இவரது மனைவி கல்ப... மேலும் பார்க்க

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

மக்களிடையே ஏற்றத் தாழ்வு என்ற எண்ணமே இல்லாத பெரும் தலைவராக திகழ்ந்தவா் பெரியாா் ஈவெரா என அமைச்சா் எ.வ.வேலு புகழாரம் சூட்டினாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த ... மேலும் பார்க்க

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

வந்தவாசி தேரடியில் உள்ள தனியாா் அரங்கில் ரக்சா பந்தன் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் மற்றும் ரோட்டரி சங்கங்கள் சாா்பில் இந்த விழா ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: நாடக நடிகா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் நாடக நடிகா் உயிரிழந்தாா். உடன் சென்ற நண்பா் பலத்த காயமடைந்தாா். செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் நாடக நடிகா் ரஞ்சித்குமாா் ... மேலும் பார்க்க

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

பெரியாா் ஈவெராவின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் புதன்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதிமுக ஆரணி அதிமுக சாா்பில... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

1987 -இல் இட ஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு பாமக சாா்பில், செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. செய்யாற்றில், புதன்கிழமை இரவு பாமகவினா் கைகளில் மெ... மேலும் பார்க்க