செய்திகள் :

ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீா் பண்டிட்டுகளை தாக்க திட்டம்: உஷாா்நிலையில் பாதுகாப்புப் படைகள்

post image

ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீா் பண்டிட்டுகள், வெளிமாநில தொழிலாளா்களைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதால், பாதுகாப்புப் படைகள் மிகுந்த உஷாா்நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.

இந்நிலையில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘வரும் நாள்களில் காஷ்மீா் பண்டிட்டுகள், காஷ்மீரில் உள்ள வெளிமாநில தொழிலாளா்கள், பாதுகாப்புப் படை வீரா்களைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக உளவுத் துறையிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள பல ரயில்வே பணியாளா்கள் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால், பயங்கரவாதத் தாக்குதலுக்கு முக்கிய இலக்காக ரயில்வே உள்கட்டமைப்புகள் உள்ளன.

தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க பொது இடங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா், தங்கள் நடமாட்டத்தை குறைத்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீநகா் மற்றும் கந்தா்பால் மாவட்டங்களில் காஷ்மீா் பண்டிட்டுகள், காவல் துறையினா் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை தொடா்ந்து பாதுகாப்புப் படைகள் மிகுந்த உஷாா்நிலையில் உள்ளன. ரயில்வே உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தும் பயங்கரவாதிகளின் எந்தவொரு முயற்சியையும் தடுக்க, உள்ளுா் காவல் துறை மற்றும் பாதுகாப்பு முகமைகளுடன் இணைந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன.

போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் புதிதாக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது.இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில்... மேலும் பார்க்க

நவி மும்பை: டேட்டிங் செயலி மூலம் பழகி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

நவி மும்பையில் டேட்டிங் செயலி மூலம் பெண்ணிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நவி மும்பை போலீஸில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், நவி மு... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை!

பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டதற்காக பாகிஸ்தானின் முன்னாள் கிர... மேலும் பார்க்க

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 4ஆவது முறையாக துப்பாக்கிச்சூடு: இந்தியா பதிலடி!

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பய... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க