செய்திகள் :

ராங்கியம் மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 96 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ராங்கியம் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில், புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 291 பயனாளிகளுக்கு ரூ. 96 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கினாா்.

முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். முன்கூட்டியே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில், பல்வேறு துறைகளின் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பிற மனுக்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் க. ஸ்ரீதா், முதன்மை கல்வி அலுவலா் கூ. சண்முகம், வட்டாட்சியா் ராமசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

விராலிமலையில் தொடா் திருட்டு: இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிகளில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விராலிமலை சிதம்பரம் காா்டன், தேரடித் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல்சம்பவத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிச... மேலும் பார்க்க

காா் பழுது நீக்கும் மையத்தில் திடீா் தீ

புதுக்கோட்டை நகரிலுள்ள காா் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை திருமயம் சாலை மாலையீட்டில் உள்ள காா் பழுது நீக்கும் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென தீ... மேலும் பார்க்க

காவல்துறை வாகனங்கள் ஜூன் 23 இல் ஏலம்

புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் ஜூன் 23 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல்துறை ... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் குருபூஜை விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே பைக் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வியாழக்கிழமை மாமாவுடன் நடந்து சென்ற சிறுவன் பைக் மோதி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், ஊனையூா் கள்ளப்பட்டியை சோ்ந்தவா் பிரபாகரன் மகன் சித்து ரூபன் (5). இவா் இலு... மேலும் பார்க்க