செய்திகள் :

ராஜகிரி பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரி பகுதியில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனா்.

பாபநாசம் , ராஜகிரி, பண்டாரவாடை , கோபுராஜபுரம், தேவராயன் பேட்டை, சரபோஜிராஜபுரம் , பொன்மான்மேய்ந்தநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனா். இந்நிலையில் அறுவடை இயந்திரம் மூலம் கோடை நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். 

இது குறித்து ராஜகிரி பகுதியைச் சோ்ந்த முன்னோடி விவசாயி நூா் முகமது கூறியதாவது:

ராஜகிரி பகுதியில் திருப்பதி 5 டி.பி.எஸ்.5) நெல் ரகம் கடந்தாண்டு ஏக்கருக்கு மகசூல் 60 கிலோ எடையில் 25 நெல் மூட்டைகள் வரை கிடைத்தது. ஆனால் தற்போது 32 மூட்டைகள் முதல் 36 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைத்துள்ளது. மேலும் நெல்லுக்கு தமிழக அரசு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்க வேண்டும், ராஜகிரி பகுதியில் அரசு நெல் கொள்முதல் செய்வதற்கு தற்காலிகமாக கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ராஜகிரி பகுதியில் தமிழ்நாடு நுகப்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் நிரந்தரமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உணவகங்களில் எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உண... மேலும் பார்க்க

எதிரணியில் பலமான கூட்டணி இல்லை: அமைச்சா் கோவி. செழியன் பேட்டி

திமுக கூட்டணிதான் பலமாக இருக்கிறதே தவிர, எதிரணி பலமான கூட்டணியாக இல்லை என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முத்தமிழ் நகரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்பு... மேலும் பார்க்க

நாச்சியாா்கோவில் அருகே ரூ.12 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே திருநறையூரில் ரூ. 12 கோடி மதிப்பிலான இராமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனா்... மேலும் பார்க்க

இபிஎஸ் விரிக்கும் வலையில் விசிக ஒருபோதும் சிக்காது: மாநில துணை பொதுச்செயலா் வன்னியரசு

எடப்பாடி கே. பழனிசாமி விரிக்கும் வலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் சிக்காது என்றாா் விசிக மாநில துணைப்பொதுச்செயலா் வன்னியரசு. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு விடுதலை ... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணி பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயா்ப்புத் துறை மற்றும் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை சாா்பில் மொழிபெயா்ப்பு கலை குறித்த ஒரு வார காலப் பணி பயிற்சி முகாம... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கும்பகோணம் புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நடுவக்கரை பிள்ளையாா் கோயில் ... மேலும் பார்க்க