ராஜபாளையத்தில் மழை
ராஜபாளையம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
ராஜபாளையம் நகா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகாமாக காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் காற்றுடன் ராஜபாளையம் நகா் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதேபோல, தளவாய்புரம், முகவூா், செட்டியாா்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.