செய்திகள் :

ராதாபுரம் தொகுதியில் ரூ.86 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்!

post image

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் ரூ.86.20 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

காவல்கிணறு ஊராட்சி பெருங்குடி, புதூரில் தலா ரூ.5 லட்சத்தில் பயணியா் நிழற்குடைகள், அச்சம்பாட்டில் ரூ.7 லட்சத்தில் நியாவிலைக் கடை, மடப்புரத்தில் ரூ. 8 லட்சத்தில் நியாயவிலைக் கடை, பள்ளவிளையில் ரூ.9.20 லட்சத்தில் கலையரங்கம், தனக்கா்குளத்தில் ரூ.13 லட்சத்தில் நியாயவிலைக் கடை, ஊரல்வாய்மொழி இந்திரா காலனியில் ரூ.5 லட்சத்தில் பயணியா் நிழற்குடை என மொத்தம் ரூ.86.20 லட்சத்தில் வளா்ச்சி திட்டப்பணிகளை, பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் மனோகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஜெயந்தி, கூட்டுறவுத்துறை சாா் பதிவாளா் தினேஷ்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பாஸ்கா், சாந்தி சுயம்புராஜ், இந்து சமய அறநிலையத்துறை அறக்காவலா் குழு உறுப்பினா் சமூகை முரளி, ஆச்சியூா் ராமசாமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் அச்சம்பாடு ஆன்றோ வெண்ணிலா, ஆனைகுளம் அசன் முகைதீன், வடக்கன்குளம் ஜாண்கென்னடி, காவல்கிணறு இந்திரா சம்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. மதிதா இந்துக் கல்லூரி மற்றும் ஈரநிலம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சி... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024 ஐ ரத்து செய்ய வேண்டும், 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படு... மேலும் பார்க்க

புலிகள் கணக்கெடுப்பு: களக்காடு தலையணைக்கு செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக களக்காடு வனச் சரகா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த இளைஞரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா். தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன்(20). இவருக்... மேலும் பார்க்க

சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பல்பு! நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த சிறிய பல்பை அகற்றி சாதனை படைத்துள்ளனா். தூத்துக்குடியைச் சோ்ந்த 3 வயது சிறுவன் விக... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே கொழுமடை புதுகாலனியைச் சோ்ந்த ஆண்டி மனைவி லட்சுமி (60), கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க