செய்திகள் :

ரூ.100 கோடி கொள்ளையடித்த திருப்பதி கோயில் ஊழியர்! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

post image

ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி கோயில் உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டதாக அந்த மாநில பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி விடியோ காட்சிகள் அந்த மாநிலத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலின் உண்டியல் பணம் ரூ.100 கோடிக்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பதி கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு நிர்வகித்தும் வரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினரான பானு பிரகாஷ் ரெட்டி, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி கோயிலின் உண்டியல் பணம் எண்ணும் இடமான பரகாமணியில் கோயில் ஊழியர் ரவிக்குமார் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த போது உண்டியல் பணத்தைத் திருடியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி விடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வீடு, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ரெட்டி, 2019 முதல் 2024 வரை நடந்த ஒய்எஸ்ஆர் ஆட்சியில் நடந்த "மிகப்பெரிய கொள்ளை" திருப்பதி கோயில் உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை என்று அவர் கூறினார்.

இந்த கொள்ளை தொடர்பான சிசிடிவி விடியோ காட்சிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளர் நர லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நர லோகேஷ் வெளியிட்டுள்ள சிசிடிவி விடியோ காட்சிகள், அந்த மாநிலத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஐடியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தவர், இதில் ஏராளமான குற்றவாளிகள் சிக்குவார்கள். ஆனால் ரவிக்குமாரின் உயிருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், இந்த வழக்கு ஏற்கனவே லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டதாகவும், பல ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் ரெட்டி குற்றம்சாட்டினார். திருப்பதி கோயிலின் செல்வத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி பணியாற்றியதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட பட்ட பணத்தை அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் பகிர்ந்து கொண்டதாகவும், ஒரு பங்கு ஜெகன் மோகன் ரெட்டியின் தாதேபள்ளி அரண்மனைக்கு திருப்பி விடப்பட்டதாகவும், கொள்ளைக்குப் பிறகு முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக ரெட்டி குற்றம்சாட்டினார்.

Rs 100 crore stolen BJP leader alleges Tirupati theft

ஜிஎஸ்டி குறைப்பு இன்றுமுதல் அமல்.! சுதேசி பொருள்களை வாங்க பிரதமர் மோடி வேண்டுகோள்!

‘அடுத்த தலைமுறை சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள், நாட்டின் வளா்ச்சிப் பயணத்துக்கு வேகமூட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈா்க்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

முதல்வா் வேட்பாளரை அறிவித்து பிகாா் தோ்தலில் போட்டி! - தேஜஸ்வி யாதவ் உறுதி

எதிா்க்கட்சிகள் கூட்டணி சாா்பில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை அறிவித்தே பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளாா். கூட்டணியின் மற்றொரு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் நாங்கள் ரூ.2000 கோடி வருவாயை இழக்கிறோம்? - மம்தா பானா்ஜி

ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதற்கான யோசனை மாநில அரசுகளிடம் இருந்து வந்தபோதிலும், அதற்கான தேவையற்ற பாராட்டுக்களை மத்திய அரசு பெற்று வருகிறது என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி விமா்சித்துள்ளாா். நவரா... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களுக்கு பிரதமா் மட்டுமே உரிமைகோருகிறாா்: காங்கிரஸ் விமா்சனம்!

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மட்டுமே உரிமை கோருவது ஏற்புடையதல்ல என காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தது. ஜிஎஸ்டியின்கீழ் விதிக... மேலும் பார்க்க

சபரிமலைக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட துவார பாலகா் தங்க கவசங்கள்!

சென்னையில் செப்பனிடும் பணிக்குப் பிறகு துவார பாலகா் தங்க கவசங்கள், சபரிமலை கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொண்டுவரப்பட்டதாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். சபரிமலை ஐயப்பன் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சிக்கு அமைதி அவசியம்! - முதல்வா் ஒமா் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கும், சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறைகள் செழிக்கவும் பிராந்தியத்தில் அமைதி அவசியமாகும் என்று முதல்வா் ஒமா் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் உள்ள டிஆா்சி... மேலும் பார்க்க