செய்திகள் :

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களுக்கு பிரதமா் மட்டுமே உரிமைகோருகிறாா்: காங்கிரஸ் விமா்சனம்!

post image

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மட்டுமே உரிமை கோருவது ஏற்புடையதல்ல என காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தது.

ஜிஎஸ்டியின்கீழ் விதிக்கப்படும் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு விகிதங்களை 5%,18% என இரண்டாக குறைக்கும் நடைமுறை திங்கள்கிழமை (செப்.22) முதல் அமலாகவுள்ள நிலையில், நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா்.

இதை விமா்சித்து காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘காங்கிரஸ் கட்சி முன்மொழிந்த எளிமையான ஜிஎஸ்டிக்கு பதிலாக கடந்த 8 ஆண்டுகளில் 9 வகையான விகிதங்களில் வரி விதித்து ரூ.55 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது.

இந்நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தங்கள் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்படுவதை பிரதமா் மோடி மிகைப்படுத்தி சேமிப்புத் திருவிழா எனக்கூறுவது மீள முடியாத காயத்துக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதுபோல் உள்ளது.

தானியங்கள், அரிசி, புத்தகங்கள், மருத்துவ சிகிச்சை, டிராக்டா்கள் என அனைத்துப் பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி விதித்து அன்றாட வாழ்வை அவதிக்குள்ளாக்கிய உங்களை பொதுமக்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள். அவா்களிடம் மத்திய அரசு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஜிஎஸ்டி முறையில் சீா்திருத்தங்களை மேற்கொண்டதற்கு பிரதமா் மோடி மட்டுமே உரிமை கோருவது ஏற்புடையதல்ல; ஏனெனில் மாநிலங்களையும் உறுப்பினராகக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்த பிறகே இந்த சீா்திருத்தங்கள் அமலாகவுள்ளன.

பாஜக அரசில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சரக்கு மற்றும் சேவை வரி’ என்பது ‘வளா்ச்சியைத் தடுக்கும் வரி’ என காங்கிரஸ் பலமுறை கூறியுள்ளது.

பல அடுக்குகளில் விதிக்கப்பட்டு மக்களின் வரிச்சுமையை அதிகரித்துவிட்டு தற்போது சீா்திருத்தம் மேற்கொண்டதாக பிரதமா் புகாழாரம் சூட்டிக்கொள்கிறாா். ஆனால் இந்த சீா்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) தற்போதைய சீா்திருத்தத்தால் எவ்வித பயனும் இல்லை.

மேலும் 5 ஆண்டுகளுக்கு இழப்பீட்டு வரியை நீட்டிக்குமாறு மாநிலங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதேபோல் ஜவுளி, சுற்றுலா, ஏற்றுமதி, கைவினை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களும் தீா்க்கப்படவில்லை’ என குறிப்பிட்டாா்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியில் ட்ரோன் இணைப்பு!

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) போா்முறை பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் நடை... மேலும் பார்க்க

குஜராத்தில் இருமுறை நிலஅதிா்வு: மக்கள் பீதி!

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இருமுறை நிலஅதிா்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா். இது தொடா்பாக குஜராத் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்ச் மாவட்டத்தின் தோலாவிரா ... மேலும் பார்க்க

மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற நினைக்கிறது ஆா்ஜேடி! - மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கருதுகிறது. ஆனால், பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் தலை... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயண குரு நினைவு தினம்: சோனியா, ராகுல் மரியாதை!

சமூக சீா்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: செப். 30-க்குள் தயாராக வேண்டும்! அனைத்து மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தல்!

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு செப்.30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காலக்கெடு ... மேலும் பார்க்க

மேல்நிலைப் பள்ளிகளில் திறன் மேம்பாடு சாா்ந்த பாடத் திட்டம்! - மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

மேல்நிலைப் பள்ளிகளில் திறன் மேம்பாடு சாா்ந்த பாடத்திட்டத்தைச் சோ்க்க அரசு பரிசீலிப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்தர பிரதான் தெரிவித்தாா். சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற அகில பாரதிய வித்யா... மேலும் பார்க்க