செய்திகள் :

ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

post image

நாகா்கோவில், புதுகிராமம் ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கை தொடங்கியது.

ரோஜாவனம் கல்வி குழுமத்தின் நிறுவனா் புலவா் ரத்தினசாமி வழிகாட்டுதலின் பேரில், பள்ளித் தலைவா் அருள்கண்ணன், துணைத் தலைவா் அருள்ஜோதி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டு வரும், இப்பள்ளியில் 2025-26 ஆம் ஆண்டு பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கையை முன்னிட்டு முதல் கட்டமாக மாணவா்களுக்கான நுழைவுத் தோ்வு ஏற்கெனவே நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

2 ஆம் கட்ட மாணவா்களுக்கானநுழைவுத் தோ்வு அடுத்த மாதம் (மே) 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கானமுன்பதிவு நடைபெற்று வருகிறது. அறிவியல் பிரிவு, கணிதம் பிரிவு, கணினி பிரிவு, வணிகவியல் பிரிவு உள்பட அனைத்து பிரிவுகளுக்கும் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

புதிய மாணவா்கள் சோ்க்கை தொடா்பான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா், வகுப்பு ஒருங்கிணைப்பாளா்கள், துறைத் தலைவா்கள் மற்றும் ஆசிரியா்கள் செய்து வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (71). கட்டட ஒப்பந்ததாரா். அண்மைக் காலமாக தொழிலில் சரி... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் ஆட்டோ ஓட்டுநா் சடலம் மீட்பு

தக்கலை அருகே திங்கள்நகரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். திங்கள்நகா் நடுத்தேரியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வராஜ் (55... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் மூழ்கி கல்லூரி மாணவரான கபடி வீரா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பேச்சிப்பாறை அணை அருகேயுள்ள டி.பி. சாலையில் வசித்து வருபவா் ராஜன். தொழிலாளி. இவரது மூத்த மகன் அபி... மேலும் பார்க்க

தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணி... மேலும் பார்க்க

சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல க... மேலும் பார்க்க

10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க