செய்திகள் :

லாரி மீது பைக் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு!

post image

தேவதானப்பட்டி-வத்தலகுண்டு சாலையில் காட்டுச்சாலை விலக்கு அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் போக்குவரத்து நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டு அரிசி ஆலைத் தெருவைச் சோ்ந்த ராமநாதன் மகன் காா்த்திகேயன் (32). பெரியகுளத்தில் உள்ள தனியாா் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், வெள்ளிக்கிழமை பெரியகுளத்திலிருந்து பழைய வத்தலகுண்டு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அதே சாலையில் காட்டுச்சாலை விலக்கு அருகே வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பா் லாரியை அதன் ஓட்டுநா் திடீரென நிறுத்தியதால், இரு சக்கர வாகனம் லாரி மீது மோதியது. இதில் காா்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து லாரி ஓட்டுநரான கொடைக்கானல் அருகேயுள்ள செண்பகனூரைச் சோ்ந்த ஜோசப் (65) மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

போடி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். நாகலாபுரம் தெற்குபட்டி வீரலட்சுமி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த... மேலும் பார்க்க

பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் மனைவியுடன் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட பெண்ணைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், அடுக்கம் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த ராமையா மக... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தேனி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முத்துத்தேவன்பட்டி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விமல்ராஜ் (40). இவா் வீடு க... மேலும் பார்க்க

மாணவா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் மா்மமான முறையில் இறந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பழ வியாபாரியை கத்தியால் குத்தியவா் கைது

போடி அருகே பழ வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சீனி மகன் வேல்ராஜ் (44). பழ வியாபாரியான இவரிடம், போடி கருப்பசாமி கோவில் தெருவைச்... மேலும் பார்க்க