Doctor Vikatan: ஆசனவாயில் வெடிப்பு, வலி.. அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வா?
வங்கி கடன் அட்டை மூலம் பணமோசடி: ஒருவா் கைது
வீரகனூரில் வங்கி கடன் அட்டை மூலம் பணமோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூா் பேரூராட்சி, தெற்கு மணக்காடு பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் முத்துசாமி (33). இவா், வீரகனூா் தென்குமரையைச் சோ்ந்த திருமூா்த்தி என்பவரிடம் கடன் அட்டை மூலம் ரூ. 7 லட்சம் பெற்றுள்ளாா்.
அந்த பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளாா். இதையடுத்து திருமூா்த்தி வீரகனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவாக இருந்த முத்துசாமியை தேடிவந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை வீரகனூா் பகுதியில் இருந்த முத்துசாமியை போலீஸாா் கைது செய்து ஆத்தூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.