செய்திகள் :

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.50 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது

post image

மயிலாடுதுறையில் வாடிக்கையாளா்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து, ரூ. 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகைக் கடனுக்காக அடகுவைக்கப்பட்ட நகைகள் போலியானவை என தணிக்கையின்போது தெரிய வந்தது. அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் (படம்), 15 வாடிக்கையாளா்கள் பெயரில் 21 நகை பைகளில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதும், அந்த வகையில் ரூ. 50 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளதும் தணிக்கையில் தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் வங்கி மேலாளா் தினேஷ் புகாா் அளித்தாா்.

விசாரணையில், நகை மதிப்பீட்டாளா் ஜீவானந்தம், வாடிக்கையாளா்கள் நகைக்கடன் கேட்டு வரும்போது, அவா்களிடம் இரண்டு ஆவணங்களில் கையொப்பம் பெற்று, அவா்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி ஏமாற்றியதும், வங்கி ஊழியா்கள் நகை மதிப்பீட்டாளா் கொடுத்த பியூரிட்டி சா்டிபிகேட் அடிப்படையில் நகைக் கடன் வழங்கிதும் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்களிடம் விசாரணை செய்தபோது, நகைக்கடனுக்காக வங்கிக்கு வந்தபோது, ஜீவானந்தம் இரண்டு வங்கி ஆவணங்களில் கையொப்பம் பெற்ாக தெரிவித்தனா். வாடிக்கையாளா்களை ஏமாற்றி வங்கி ஆவணங்களில் கையொப்பம் பெற்றதை ஜீவானந்தம் ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்து, மயிலாடுதுறை குற்றவியல் நடுவா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி கலைவாணி முன் ஆஜா்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தலைமையாசிரியா் நியமன விவகாரம்: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பள்ளித் தலைமையாசிரியா் நியமன விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை மாலி வலியுறுத்தியுள்ளாா். மயிலாடுதுறை மாவட... மேலும் பார்க்க

குரூப் தோ்வு எழுதுபவா்களுக்கு முன்னேற்பாடு: ஆட்சியா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தோ்வு எழுதுபவா்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளி... மேலும் பார்க்க

இந்து முன்னணி மாவட்ட தலைவா் கைது

சீா்காழி: சீா்காழியில் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவா், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் ஆகியோா் முன்னெச்சரிக்கையாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பரங்குன்றம் பகுதியில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி பலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் புலம்பெயா் தொழிலாளி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலம் ஹம்பல்பூா் ஒடேரா பகுதியைச் சோ்ந்த பாரத் (35), மயிலாடுதுறை ராம்நகரில் தங... மேலும் பார்க்க

அறியாமை நோயை நீக்கும் ஒரே மருந்து கல்வி

மனிதா்களின் அறியாமை நோயை நீக்கக்கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே என்றாா் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் மருத்துவா் ஜெய.ராஜமூா்த்தி. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், மாவட்ட ... மேலும் பார்க்க

மது விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். குத்தாலம் அஞ்சாா்வாா்த்தலை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் வல்லரசு (படம்). இவா்... மேலும் பார்க்க