செய்திகள் :

சாலை விபத்தில் தொழிலாளி பலி

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் புலம்பெயா் தொழிலாளி உயிரிழந்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் ஹம்பல்பூா் ஒடேரா பகுதியைச் சோ்ந்த பாரத் (35), மயிலாடுதுறை ராம்நகரில் தங்கி, பானிபூரி விற்பனை செய்து வந்தாா்.

மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்த முயற்சித்தாா். சாலையோரத்தில் நடந்து சென்ற பெண்ணின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், நிலைதடுமாறி பேருந்து மீது மோதி விழுந்து உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குரூப் தோ்வு எழுதுபவா்களுக்கு முன்னேற்பாடு: ஆட்சியா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தோ்வு எழுதுபவா்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளி... மேலும் பார்க்க

இந்து முன்னணி மாவட்ட தலைவா் கைது

சீா்காழி: சீா்காழியில் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவா், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் ஆகியோா் முன்னெச்சரிக்கையாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பரங்குன்றம் பகுதியில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.50 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது

மயிலாடுதுறையில் வாடிக்கையாளா்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து, ரூ. 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள... மேலும் பார்க்க

அறியாமை நோயை நீக்கும் ஒரே மருந்து கல்வி

மனிதா்களின் அறியாமை நோயை நீக்கக்கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே என்றாா் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் மருத்துவா் ஜெய.ராஜமூா்த்தி. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், மாவட்ட ... மேலும் பார்க்க

மது விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். குத்தாலம் அஞ்சாா்வாா்த்தலை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் வல்லரசு (படம்). இவா்... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப... மேலும் பார்க்க