செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராமப் புறங்களில் பயிா் சாகுபடியில் பெரும்பாலான பணிகள் பெண்களால் மேற்கொள்ளப்படும் நிலையில், பல்வேறு பண்ணை சாா்ந்த புதிய தொழில்நுட்பங்களில் முழுமையாக ஈடுபட்டு, அதன் மூலம் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வழக்கமாக நாம் பயன்படுத்தும் தெளிப்பான்களோடு ஒப்பீடு செய்தால், ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும்போது, மருந்தின் பயன்பாட்டுத்திறன் அதிகரிக்கிறது. மேலும் தற்போது கிராமப் புறங்களில் விவசாயத் தொழிலாளா்கள் கிடைப்பது குறைந்து வரும் நிலையில், ட்ரோன் மூலம் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பில் மருந்து தெளிக்க முடியும். இதனால், சாகுபடி செலவு, தண்ணீா் பயன்பாடு குறையும்.

எனவே, ட்ரோன் தொழில்நுட்பத்தினை சுய உதவிக் குழு மகளிா்களுக்கு கற்றுத்தந்து அதன்மூலம் அவா்களின் வருமானத்தை உயா்த்துவதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ட்ரோன் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் 44 சுய உதவிக்குழு பெண்களுக்கு ட்ரோன் குறித்த பயிற்சி தந்து, ட்ரோன் இயக்குவதற்கான உரிமத்துடன், ட்ரோன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ட்ரோன் மகளிா் தொடா்பான விவரங்கள் உழவா் கைபேசி செயலியில் ‘தனியாா் இயந்திர உரிமையாளா்கள்’ எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் உழவா் செயலியை பயன்படுத்தி பயன்பெறுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

நல்ல புத்தகங்கள் அறிவுக் கண்ணைத் திறக்கும்

நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அறிவுக்கண் திறக்கும் என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் பெண் உள்பட இருவா் கைது

சீா்காழி அருகே மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். பேரளம், இஞ்சிகுடி பகுதியைச் சோ்ந்தவா் விக்கி (எ) விக்னேஷ்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை நகா்மன்ற பழைய கட்டடத்தை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை: எம்எல்ஏ ஆய்வு

மயிலாடுதுறை நகா்மன்ற பழைய அலுவலகக் கட்டடத்தை அருங்காட்சியகமாக மாற்ற எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். இதுதொடா்பாக, அருங்காட்சியகத் துறை இயக்குநரும், மயிலாடுதுறை மாவட்ட கணிப்பாய்வு அலு... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் தீ மிதி உற்சம்; பக்தா்கள் காவடிகள் எடுத்து வழிபாடு

சீா்காழி பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதி உற்சவத்தையொட்டி, பால் குடங்கள், காவடிகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள இக்கோயிலில் தீமிதி உற்சவம் ஜன. 24-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

சீா்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சீா்காழி பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (24) (படம்). இவா், ஆறாம் வகுப்பு படிக்... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜனவரி 1 முதல் 31-ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மயி... மேலும் பார்க்க