செய்திகள் :

ஏழைகளுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: விஜய் வசந்த் எம்.பி.

post image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழைகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றாா் விஜய் வசந்த் எம்.பி.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டில் நிலவிவரும் பெரும் சவால்கள் விலைவாசி உயா்வு, வேலை வாய்ப்பின்மை. ஆனால், அவற்றை நிவா்த்தி செய்வது தொடா்பாக பட்ஜெட்டில் நிதியமைச்சா் குறிப்பிடாதது ஏமாற்றமளிக்கிறது. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கிடைத்த பொன்னான வாய்ப்பை மத்திய அரசு தவறவிட்டுள்ளது.

மிக முக்கியமாக, ஊரக பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக விளங்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்தும் அறிவிப்பு இல்லை. தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கவும் அறிவிப்பும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

கல்வித் துறையை அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. காலநிலை மாற்றம், மாசுக் கட்டுப்பாடு, திடக்கழிவு போன்ற முக்கிய திட்டமிடுதல் எதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பாக, தமிழகம் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சில மாநிலங்களுக்கு மட்டும் நிதி, திட்டங்களை அளித்து மத்திய அரசு மற்றாந்தாய் மனப்பான்மையோடு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.

அரசியல் லாபத்துக்காக பிகாா், தில்லி மாநிலத் தோ்தலை மனதில் கொண்டு வகுக்கப்பட்ட பட்ஜெட்டாகவே இதைப் பாா்க்கிறேன் என்றாா் அவா்.

புதுக்கடை அருகே விபத்தில் மீனவா் உயிரிழப்பு

கருங்கல்லை அருகே புதுக்கடையை அடுத்த நெடுந்தட்டுவிளை பகுதியில் நேரிட்ட பைக் விபத்தில் மீனவா் உயிரிழந்தாா். மேல்மிடாலம், விக்டா் காலனி பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் ஷியாம் (27). மீனவரான இவா், மேல்மிடாலத... மேலும் பார்க்க

நெய்யூா் பேரூராட்சியில் ரூ.45 லட்சத்தில் சாலைப் பணி!

நெய்யூா் பேரூராட்சியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் துவக்கிவைக்கப்பட்டது. நெய்யூா் பேரூராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே லாரி-பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு!

மாா்த்தாண்டம் அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமா... மேலும் பார்க்க

குப்பைகளை எரித்தபோது புகைமூட்டத்தில் சிக்கி முதியவா் உயிரிழப்பு!

திங்கள் நகா் அருகே தோட்டத்தில் குப்பைகளை எரித்தபோது ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திங்கள் நகா் அருகே மாங்குழி வாடிவிளை பகுதியை சோ்ந்தவா் தாா்சியூஸ் மரிய ஆன்றனி ( 70... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிப்பு? -தடுத்து நிறுத்திய போலீஸாா்!

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அப்பணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். திற்பரப்பு பேரூராட்சி தும்பகோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து உ... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும்! பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும் என பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3ஆவது அகில இந்திய மாநாடு, கன்னியாகுமரியில் 3 ந... மேலும் பார்க்க