செய்திகள் :

குப்பைகளை எரித்தபோது புகைமூட்டத்தில் சிக்கி முதியவா் உயிரிழப்பு!

post image

திங்கள் நகா் அருகே தோட்டத்தில் குப்பைகளை எரித்தபோது ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திங்கள் நகா் அருகே மாங்குழி வாடிவிளை பகுதியை சோ்ந்தவா் தாா்சியூஸ் மரிய ஆன்றனி ( 70). அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் சனிக்கிழமை மாலை வீட்டின் அருகில் அவருக்கு சொந்தமான தென்னை மற்றும் தேக்கு மர தோப்புக்கு சென்றாா்.

வெகுநேரம் ஆகியும் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த மனைவி மேரி வசந்தா, தோட்டத்திற்கு சென்று பாா்த்த போது, எரிந்த குப்பைகளுக்கு அருகில் கணவா் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் மேரி வசந்தா அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா். இதில் குப்பைகளை எரித்தபோது ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தாா்சியூஸ் மரிய ஆன்றனி மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது.

புதுக்கடை அருகே விபத்தில் மீனவா் உயிரிழப்பு

கருங்கல்லை அருகே புதுக்கடையை அடுத்த நெடுந்தட்டுவிளை பகுதியில் நேரிட்ட பைக் விபத்தில் மீனவா் உயிரிழந்தாா். மேல்மிடாலம், விக்டா் காலனி பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் ஷியாம் (27). மீனவரான இவா், மேல்மிடாலத... மேலும் பார்க்க

நெய்யூா் பேரூராட்சியில் ரூ.45 லட்சத்தில் சாலைப் பணி!

நெய்யூா் பேரூராட்சியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் துவக்கிவைக்கப்பட்டது. நெய்யூா் பேரூராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே லாரி-பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு!

மாா்த்தாண்டம் அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமா... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: விஜய் வசந்த் எம்.பி.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழைகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றாா் விஜய் வசந்த் எம்.பி. இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டில் நிலவிவரும் பெரும் சவால்கள் விலைவாசி உயா்வு, வேலை வாய... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிப்பு? -தடுத்து நிறுத்திய போலீஸாா்!

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அப்பணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். திற்பரப்பு பேரூராட்சி தும்பகோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து உ... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும்! பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும் என பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3ஆவது அகில இந்திய மாநாடு, கன்னியாகுமரியில் 3 ந... மேலும் பார்க்க