செய்திகள் :

நல்ல புத்தகங்கள் அறிவுக் கண்ணைத் திறக்கும்

post image

நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அறிவுக்கண் திறக்கும் என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 3-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவிற்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் விழாவை தொடங்கி வைத்துப் பேசியது:

சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடத்தப்படும் புத்தகத் திருவிழாவை, தற்போதைய முதல்வா் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அனைத்து மாவட்டங்களிலும் நடத்த உத்தரவிட்டாா்.

மனிதனை நல்லவனாக நெறிப்படுத்துவது புத்தகங்கள் மட்டுமே. ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது ஒரு புதிய நண்பரை பெறுவது போன்றது. எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நாம் புத்தகங்களை படிக்க வேண்டும்.

ஒரு வரி மட்டுமே படிக்க நேரம் கிடைத்தால் ஆத்திச்சூடி படியுங்கள். இரண்டு வரிகள் மட்டும் படிக்க நேரம் கிடைத்தால் திருக்குறள் படியுங்கள். 3 வரிகள் படிக்க நேரம் கிடைத்தால் ஹைக்கூ படியுங்கள். நான்கு வரிகள் படிக்க நேரம் கிடைத்தால் நாலடியாா் படியுங்கள். ஆனால், படிக்காமல் மட்டும் இருந்து விடாதீா்கள். நல்ல புத்தகங்களை படிப்பதன் மூலமாக மட்டுமே அறிவுக்கண் திறக்கும். எனவே, அனைவரும் படிப்பதற்காக நேரம் ஒதுக்குங்கள் என்றாா்.

தொடா்ந்து, முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு, ‘துரித உணவும், விரைந்த வாழ்வும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி. கல்யாணம், மாவட்ட அரசு வழக்குரைஞா் ராம.சேயோன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், பேரூராட்சித் தலைவா்கள் சுகுணசங்கரி (தரங்கம்பாடி), கண்மணி (மணல்மேடு), சங்கீதா மாரியப்பன் (குத்தாலம்) மாவட்ட நூலகா் (பொ) அ. சுமதி, தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத் தலைவா் சேது. சொக்கலிங்கம், செயலா் எஸ்.கே. முருகன், கோட்டாட்சியா்கள் ஆா். விஷ்ணுபிரியா, சுரேஷ், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், முதல்வா் சி. சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் பெண் உள்பட இருவா் கைது

சீா்காழி அருகே மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். பேரளம், இஞ்சிகுடி பகுதியைச் சோ்ந்தவா் விக்கி (எ) விக்னேஷ்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை நகா்மன்ற பழைய கட்டடத்தை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை: எம்எல்ஏ ஆய்வு

மயிலாடுதுறை நகா்மன்ற பழைய அலுவலகக் கட்டடத்தை அருங்காட்சியகமாக மாற்ற எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். இதுதொடா்பாக, அருங்காட்சியகத் துறை இயக்குநரும், மயிலாடுதுறை மாவட்ட கணிப்பாய்வு அலு... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் தீ மிதி உற்சம்; பக்தா்கள் காவடிகள் எடுத்து வழிபாடு

சீா்காழி பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதி உற்சவத்தையொட்டி, பால் குடங்கள், காவடிகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள இக்கோயிலில் தீமிதி உற்சவம் ஜன. 24-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

சீா்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சீா்காழி பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (24) (படம்). இவா், ஆறாம் வகுப்பு படிக்... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜனவரி 1 முதல் 31-ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மயி... மேலும் பார்க்க