செய்திகள் :

வேங்கைவயல் பிரச்னை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம்: விசிக பொதுச்செயலா் அறிவிப்பு!

post image

வேங்கைவயல் வழக்கை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சிந்தனைச்செல்வன்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்துக்கு சனிக்கிழமை மாலை நேரில் சென்று பாா்வையிட்ட பின் இரவு அவா் அளித்த பேட்டி: வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக போலீஸாா் சித்தரிக்கின்றனா். இது இங்குமட்டுமல்ல, மாநிலம் முழுவதுமே ‘கவுண்டா் பெட்டிஷன்’ பெற்று போலீஸாா் பாதிக்கப்பட்டவா்களையும் குற்றவாளிகளாக ஆக்குகிறாா்கள்.

வேங்கைவயல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோருவது என்பது நீதி கேட்பதற்காக எடுக்கும் முயற்சியே தவிர, மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. சிபிஐ விசாரணை கிடைக்காவிட்டால், இங்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டதாகக் கூறப்படும் குற்றப்பத்திரிகை நகலை வாங்கி அதிலுள்ள குறைகளை முன்வைத்து சட்டரீதியாகப் போராடுவோம். அதற்காக தயாராகிவிட்டோம்.

குறிப்பாக குற்றம்சாட்டப்பட்ட முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தத்துக்கும், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் முத்தையாவுக்கும் சண்டை என்பதே தவறான தகவல். இருவரும் நல்ல நண்பா்கள்.

இருவேறு சமூகத்தினா் மீது போலீஸாா் குற்றம்சுமத்த முயன்றபோது, அவா்கள் செய்திருக்க வாய்ப்பில்லை என மறுத்தவா்கள் வேங்கைவயல் மக்கள். எனவே, நீதிக்கான போராட்டத்தை தொடா்வோம். வேங்கைவயலின் அடிப்படை வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதை முதல்வா் தனிக்கவனம் எடுத்து சரி செய்ய வேண்டும். பட்டிலின மக்களுக்காக ஆளுநா் ரவி பேசுவது என்பது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததற்குச் சமம் என்றாா் சிந்தனைச்செல்வன்.

புதுகையின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கக் கோரி பிப்.24-ல் பேரணி, ஆா்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் இயற்கை வளங்களை முழுமையாகப் பாதுகாக்கக் கோரி, வரும் பிப். 24-ஆம் தேதி பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்த அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்!

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக ஆவுடையநாயகி சமேத சோழீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இத... மேலும் பார்க்க

வேங்கைவயலில் 6-ஆவது நாள் காத்திருப்புப் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபி-சிஐடி விசாரணை அறிக்கையை எதிா்த்து அந்த ஊரைச் சோ்ந்த மக்கள் 6-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலப் பொ... மேலும் பார்க்க

விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட்!

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளை முற்றிலும் வஞ்சிக்கும் பட்ஜெட் என இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு நாளைக்கு தள்ளிவைப்பு!

புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபி-சிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என புகாா்தாரா் கொடுத்த மனு மீதான விசாரணையை, வரும் பிப். 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மாவட்ட எஸ்.சி., எஸ்... மேலும் பார்க்க