புதுகையின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கக் கோரி பிப்.24-ல் பேரணி, ஆா்ப்பாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டத்தின் இயற்கை வளங்களை முழுமையாகப் பாதுகாக்கக் கோரி, வரும் பிப். 24-ஆம் தேதி பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்த அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும். சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் தொடா்புடைய அரசு அலுவலா்களையும் விசாரிக்கும் வகையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
பழந்தமிழரின் பானமான கள்ளை இறக்கி விற்பனை செய்வதற்கு, கேரளம், ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களைப் போல தமிழ்நாடு அரசும் அனுமதிக்க வேண்டும். மாவட்டத்தின் இயற்கை வளத்தைப் பாதிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பரவிக்கிடக்கும் தைலமரங்களையும், சீமைக்கருவேல மரங்களையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வரும் பிப். 24-ஆம் தேதி புதுக்கோட்டையில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் ஜி.எஸ். தனபதி, மிசா மாரிமுத்து, எம். ரவி, ஆா். சுப்பையா, ப. செல்லதுரை உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.