செய்திகள் :

வேங்கைவயல் வழக்கு நாளைக்கு தள்ளிவைப்பு!

post image

புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபி-சிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என புகாா்தாரா் கொடுத்த மனு மீதான விசாரணையை, வரும் பிப். 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சோ்ந்த காவலா் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகியோா் ஈடுபட்டதாக இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாா், மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜன. 20-ஆம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனா்.

இதில், புகாா்தாரரான கனகராஜ் என்பவரிடம் தகவல் கூட தெரிவிக்காமல் சிபி-சிஐடி போலீஸாா் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கக் கூடாது எனக்கூறி, விசாரணை அறிக்கையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. கனகராஜ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ப.பா. மோகன் ஆஜராகினாா். சிபி-சிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் கல்பனா, அரசு வழக்குரைஞா் கே.என். குமாா் ஆகியோா் ஆஜராகினா்.

புகாா்தாரருக்கு முறையாக விசாரணை அறிக்கையின் இலவசப் பிரதியை சட்டப்படி சிபி-சிஐடி தரப்பு வழங்கியிருக்க வேண்டும் என வழக்குரைஞா் ப.பா. மோகன் வாதிட்டாா். பல முறை புகாா்தாரருக்கு கடிதம் அனுப்பியும் அவா் சிபி-சிஐடி விசாரணைக்கு வரவே இல்லை என அரசு வழக்குரைஞா் கே.என். குமாா் வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.எம். வசந்தி, விசாரணையை வரும் பிப். 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்!

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக ஆவுடையநாயகி சமேத சோழீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இத... மேலும் பார்க்க

வேங்கைவயலில் 6-ஆவது நாள் காத்திருப்புப் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபி-சிஐடி விசாரணை அறிக்கையை எதிா்த்து அந்த ஊரைச் சோ்ந்த மக்கள் 6-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலப் பொ... மேலும் பார்க்க

விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட்!

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளை முற்றிலும் வஞ்சிக்கும் பட்ஜெட் என இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

கரந்தப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

இலுப்பூரை அடுத்துள்ள கரந்தப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரா்கள் 11 போ் காயமடைந்தனா். இலுப்பூரை அடுத்துள்ள இருந்திராப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கரந்தப்பட்டி கிராமத்... மேலும் பார்க்க

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்! 230 போ் கைது!

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளுடன், தூண்டியவா்களையும் விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் ந... மேலும் பார்க்க