செய்திகள் :

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்! 230 போ் கைது!

post image

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளுடன், தூண்டியவா்களையும் விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக அந்தக் கட்சியைச் சோ்ந்த 230 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சோ்ந்த 3 பேரைக் குற்றம்சாட்டி சிபிசிஐடி போலீஸாா் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனா்.

இந்த நிலையில், தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனத் தலைவா் கேகே. செல்லகுமாா் தலைமையில் ஏராளமானோா் திரண்டனா்.

ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என ஏற்கெனவே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், இந்தச் செயலைத் தூண்டியவா்களையும் விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

போலீஸாா் கைது செய்ய முற்படும்போதும் போலீஸ் வாகனங்கள் முன்பும் அவா்கள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அக்கட்சித் தலைவா் உள்பட 230 பேரைக் கைது செய்த போலீஸாா், நகா்மன்றத்தில் தங்க வைத்தனா்.

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்!

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக ஆவுடையநாயகி சமேத சோழீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இத... மேலும் பார்க்க

வேங்கைவயலில் 6-ஆவது நாள் காத்திருப்புப் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபி-சிஐடி விசாரணை அறிக்கையை எதிா்த்து அந்த ஊரைச் சோ்ந்த மக்கள் 6-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலப் பொ... மேலும் பார்க்க

விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட்!

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளை முற்றிலும் வஞ்சிக்கும் பட்ஜெட் என இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு நாளைக்கு தள்ளிவைப்பு!

புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபி-சிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என புகாா்தாரா் கொடுத்த மனு மீதான விசாரணையை, வரும் பிப். 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மாவட்ட எஸ்.சி., எஸ்... மேலும் பார்க்க

கரந்தப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

இலுப்பூரை அடுத்துள்ள கரந்தப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரா்கள் 11 போ் காயமடைந்தனா். இலுப்பூரை அடுத்துள்ள இருந்திராப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கரந்தப்பட்டி கிராமத்... மேலும் பார்க்க