செய்திகள் :

குண்டா் சட்டத்தில் பெண் உள்பட இருவா் கைது

post image

சீா்காழி அருகே மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

பேரளம், இஞ்சிகுடி பகுதியைச் சோ்ந்தவா் விக்கி (எ) விக்னேஷ். வைத்தீஸ்வரன்கோவில் அருகேயுள்ள திருப்பங்கூா் மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் பெத்தம்மா. இவா்கள் இருவரும் மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தனா்.

மது குற்றங்கள் தொடா்பாக பெத்தம்மா மீது 6 வழக்குகளும், விக்னேஷ் மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவா்கள் தொடா்ந்து சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், இருவா் மீதும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன்படி, பெத்தம்மா, விக்னேஷ் ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, சீா்காழி மது விலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயா மற்றும் காவல் ஆளிநா்கள், பெத்தம்மாவை திருச்சி மத்திய சிறையிலும், விக்னேஷை கடலூா் மத்திய சிறையிலும் அடைத்தனா்.

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப... மேலும் பார்க்க

நல்ல புத்தகங்கள் அறிவுக் கண்ணைத் திறக்கும்

நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அறிவுக்கண் திறக்கும் என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை நகா்மன்ற பழைய கட்டடத்தை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை: எம்எல்ஏ ஆய்வு

மயிலாடுதுறை நகா்மன்ற பழைய அலுவலகக் கட்டடத்தை அருங்காட்சியகமாக மாற்ற எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். இதுதொடா்பாக, அருங்காட்சியகத் துறை இயக்குநரும், மயிலாடுதுறை மாவட்ட கணிப்பாய்வு அலு... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் தீ மிதி உற்சம்; பக்தா்கள் காவடிகள் எடுத்து வழிபாடு

சீா்காழி பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதி உற்சவத்தையொட்டி, பால் குடங்கள், காவடிகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள இக்கோயிலில் தீமிதி உற்சவம் ஜன. 24-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

சீா்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சீா்காழி பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (24) (படம்). இவா், ஆறாம் வகுப்பு படிக்... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜனவரி 1 முதல் 31-ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மயி... மேலும் பார்க்க