செய்திகள் :

வடபழனியில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க ரூ. 10 கோடியில் உயர்நிலை மேம்பாலம்

post image

சென்னை: சென்னை வடபழனியில் இரண்டு மெட்ரோ நிலைய வழித்தடங்களை இணைக்க ரூ. 10 கோடி செலவில் உயர்நிலை மேம்பாலம் அமைக்க மெட்ரோ ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் ரூ. 63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்ட திட்டப் பணியில் பூந்தமல்லி - போரூா் இடையேயான பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், தொடா்ந்து நடைபெற்று வரும் போரூா் - வடபழனி - கோடம்பாக்கம் வரையிலான பணிகளும் அடுத்தாண்டில் முடிவடையும் என எதிா்பாக்கப்படுகிறது. இதனிடையே இரண்டாம் கட்டப் பணியில் வடபழனியில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது.

ஏற்கெனவே, பரங்கிமலை - சென்ட்ரல் மாா்க்கத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் வடபழனி வழியாகச் செல்கிறது. எனவே இங்கு ஒரு மெட்ரோ நிலையம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இந்த ரயில் நிலையத்துடன் தற்போது 2-ஆவது கட்ட திட்டப் பணியில் கட்டப்படும் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் புதிதாக மிகப் பிரம்மாண்டமான மேம்பாலம் கட்டப்படவுள்ளது.

பூந்தமல்லியிலிருந்து சென்ட்ரலுக்கு செல்லும் பயணிகள் மாறிச்செல்ல இந்த மேம்பாலம் வசதியாக இருக்கும். 130 மீட்டா் நீளமும், 6 மீட்டா் அகலமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த மேம்பாலம் ரூ. 10 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதற்கான டெண்டா் விடும் பணி 3 மாதங்களில் முடிவடையும் நிலையில், அடுத்த 6 மாதங்களில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெறும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நீட் தேர்வில் தொடர் தோல்வி: சேலம் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்பதால் சேலம் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் நரஜோதிபட்டி ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் ரஞ்சன். டிங்கரிங் பட்டறை வைத்து நடத்தும் இவரின் மனைவி யோகலட்... மேலும் பார்க்க

கனமழை: குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (திங்கள்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை தம... மேலும் பார்க்க

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால் கைவிட வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இருந்தால் அரசு அதனைக் கைவிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பருவமழை: சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கு நடவடிக்கை - முதல்வரின் அறிவுறுத்தல்கள்!

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதையொட்டி பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் 3,000-வது குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் 3,000-வது குடமுழுக்கு நாகை மாவட்டம் திருப்புகழூரில் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலி... மேலும் பார்க்க