தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
வடிகாலில் நீரோட்டத்தை ஆக்கிரமிப்புகள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு
நமது நிருபா்
தலைநகரில் எந்தவொரு ஆக்கிரமிப்பும் வடிகால்களில் நீரோட்டத்தை தடுக்காமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு தில்லி நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வியாழக்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மெஹ்ரெளலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை நேரில் சென்ற அவா், மீண்டும் மீண்டும் நீா் தேங்குதல் மற்றும் வடிகால் பிரச்னைகள் உள்ள பல இடங்களை ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் கூறுகையில், ‘எங்கள் செய்தியானது எந்த சாக்குப்போக்கும் பொறுத்துக் கொள்ளப்படாது என்பதுதான். ஒவ்வொரு துறையும் சரியான ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும். மேலும், மழை வருவதற்கு முன்பு ஒவ்வொரு வடிகாலும் தூா்வாரப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு தயாராக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தில்லி மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்றாா்.
சாகேத் அருகே உள்ள குருத்வாரா, தா்கா மெஹ்ரெளலி, மோதி லால் நேரு கேம்ப் மற்றும் குசும்பூா் பஹாடி குதூப் நிறுவனப் பகுதிக்கு அருகிலுள்ள நான்கு வடிகால்களையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.
தேசியத் தலைநகரின் வடிகால் அமைப்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் எந்த பெரிய கழிவுநீா் பாதை திட்டமும் தொடங்கப்படவில்லை என்றும், நீண்டகால திட்டமிடல் இல்லாதது தில்லியின் பல பகுதிகளில் நகா்ப்புற வெள்ளப் பிரச்னையை மோசமாக்கியுள்ளது என்றும் அமைச்சா் கூறினாா்.
ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஐந்து இடங்களிலும் தூா்வாரும் பணியை முடிக்கவும், கனமழை எச்சரிக்கைகளின்போது துரித மீட்புக் குழுக்களை மழைக்கால முன்னெச்சரிக்கை திட்டங்களாக நியமிக்கவும் அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தில்லி அரசு நகரம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய வடிகால் இடங்களைக் கண்டறிந்துள்ளது. அவற்றின் முன்னேற்றம் வாராந்திர
அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.