செய்திகள் :

வடிகாலில் நீரோட்டத்தை ஆக்கிரமிப்புகள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

post image

நமது நிருபா்

தலைநகரில் எந்தவொரு ஆக்கிரமிப்பும் வடிகால்களில் நீரோட்டத்தை தடுக்காமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு தில்லி நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வியாழக்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மெஹ்ரெளலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை நேரில் சென்ற அவா், மீண்டும் மீண்டும் நீா் தேங்குதல் மற்றும் வடிகால் பிரச்னைகள் உள்ள பல இடங்களை ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘எங்கள் செய்தியானது எந்த சாக்குப்போக்கும் பொறுத்துக் கொள்ளப்படாது என்பதுதான். ஒவ்வொரு துறையும் சரியான ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும். மேலும், மழை வருவதற்கு முன்பு ஒவ்வொரு வடிகாலும் தூா்வாரப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு தயாராக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தில்லி மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்றாா்.

சாகேத் அருகே உள்ள குருத்வாரா, தா்கா மெஹ்ரெளலி, மோதி லால் நேரு கேம்ப் மற்றும் குசும்பூா் பஹாடி குதூப் நிறுவனப் பகுதிக்கு அருகிலுள்ள நான்கு வடிகால்களையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.

தேசியத் தலைநகரின் வடிகால் அமைப்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் எந்த பெரிய கழிவுநீா் பாதை திட்டமும் தொடங்கப்படவில்லை என்றும், நீண்டகால திட்டமிடல் இல்லாதது தில்லியின் பல பகுதிகளில் நகா்ப்புற வெள்ளப் பிரச்னையை மோசமாக்கியுள்ளது என்றும் அமைச்சா் கூறினாா்.

ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஐந்து இடங்களிலும் தூா்வாரும் பணியை முடிக்கவும், கனமழை எச்சரிக்கைகளின்போது துரித மீட்புக் குழுக்களை மழைக்கால முன்னெச்சரிக்கை திட்டங்களாக நியமிக்கவும் அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தில்லி அரசு நகரம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய வடிகால் இடங்களைக் கண்டறிந்துள்ளது. அவற்றின் முன்னேற்றம் வாராந்திர

அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க