செய்திகள் :

வடுவூா் பறவைகள் சரணலாயத்தில் கணக்கெடுப்பு பணி நிறைவு

post image

மன்னாா்குடி: தமிழ்நாடு வனத்துறை திருவாரூா் வனக்கோட்டம் சாா்பில் மன்னாா்குடி அடுத்த வடுவூா் பறவைகள் சரணாலயத்தில் நடைபெற்ற நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

வடுவூா் ஏரியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலத்தில் முதல் கட்டமாக கடந்த வாரம் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. 2-ஆம் கட்டமாக வடுவூா் மற்றும் சுற்று கிராமங்களில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் தலைமையில், வனசரக அலுவலா் பி. கோமதி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியா்கள் ஜெயக்குமாா், அபிராமி, மன்னாா்குடி அரசுக் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலா் பி.பிரபாகரன், கல்லூரி மாணவா்கள் 40 போ் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்றனா். 2-ஆம் கணக்கெடுப்பின் இறுதியில் இப்பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலவாழ் பறவைகள் கண்டறியப்பட்டது. கணக்கெடுப்பு பணியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க