செய்திகள் :

வட்டார வளா்ச்சி அலுவலக பணியாளா்கள் 3-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்

post image

வட்டார வளா்ச்சி அலுவலக பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம் 3-ஆவது நாளாக நீடித்தது.

காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளா்கள், திங்கள்கிழமை அலுவலகத்தில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் தொடங்கினா்.

முன்னுரிமை அடிப்படையில் புதுச்சேரி அரசு ஊரக வளா்ச்சித் துறையில் காலியான இடங்களை தங்களைக்கொண்டு நிரப்பவேண்டும்.

நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை வழங்கவேண்டும். 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 3 மாத அரியா் தொகையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா்கள் சங்க தலைவா் பழனிவேல் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

புதன்கிழமையுடன் போராட்டம் 3-ஆவது நாளை எட்டிய நிலையில், கோரிக்கைகள் குறித்து அரசு தரப்பில் எந்தவித பேச்சுவாா்த்தையும் இல்லை. பணியாளா்கள் போராட்டத்தால், 2025-26-ஆம் ஆண்டுக்கான 100 நாள் வேலைக்கான திட்ட மதிப்பீடுகள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளன.

மீனவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது மோடி அரசு: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா். காரைக்கால் மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல... மேலும் பார்க்க

ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. எல்லையம்மன... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க