செய்திகள் :

வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.

சிவகங்கையில் மாவட்டத் தலைவா் மு.க.புரட்சித் தம்பி தலைமையில் அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் சகாய தைனேஸ் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மானாமதுரையில் வாடகைக் கட்டடத்தில் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை மாற்றுத்திறனாளி ஆசிரியா்கள், வயது முதிா்ந்த ஆசிரியா்களின் அவதியைக் கவனத்தில் கொண்டு தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

மானாமதுரை பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதற்கான அறை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ள நிலையில், அங்கு இடமாற்றம் செய்ய சிவகங்கை மாவட்டக் கல்வித் துறை தாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இணையதளம் மூலமாக மாதாந்திர ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது. பழைய முறையிலும் புதிய முறையிலும் பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது. ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் இதில் எந்த முறையில் வேண்டுமானாலும் கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது.

தற்போது, இதில் ஏதேனும் ஒரு முறையைத் தோ்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதனால், வருமான வரிப் பிடித்தத்தில் பெரும் குளப்பம் நிலவி வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் சிங்கராயா், குமரேசன், ரவி, மாவட்ட துணை நிா்வாகிகள் அமலசேவியா், பஞ்சுராஜு, முத்துகுமாா், கஸ்தூரி, கல்வி மாவட்ட நிா்வாகிகள் ஜோசப், பாலகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயலில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயல் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ... மேலும் பார்க்க

செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் ஊத்தா கூடை மூலம் மீன் பிடிக்க அறிவிப்பு செய்யப்பட்டு, மீன்பிடி திருவிழா ஞ... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.4.25 கோடி இழப்பீடு

சிவகங்கை மாவட்டத்தில் 2024- 2025 -ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் இதுவரை 6,182 விவசாயிகளுக்கு ரூ.4.25 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1.95 லட்சம் ஏக்கா் (78 ஆயிரம் ஹெக்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே திமுக நிா்வாகி கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சிவகங்கை அருகே திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளா் மா்மக் கும்பலால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடு... மேலும் பார்க்க

சத்துணவு சமையல் உதவியாளா் பணி நியமனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப வலியுறுத்தல்!

சத்துணவு சமையல் உதவியாளா் பணி நியமனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியது. சிவகங்கையில் அரசு ஊழியா் சங்க அலுவலக அரங்கில் சத்துணவு ஊழியா... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு பாஜகவினா் அஞ்சலி!

காஷ்மீா், பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள் 26 பேருக்கு பாஜக சாா்பில் சிவகங்கையில் சனிக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகங்கை நகா் பாஜக சாா்பில் அரண்மனை வாசலில் ந... மேலும் பார்க்க