செய்திகள் :

வத்தலகுண்டு பேரூராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

post image

வத்தலகுண்டு பேரூராட்சியில் ரூ.1.96 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதுப்பட்டி, காந்திநகரில் ரூ.30 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். 

வத்தலகுண்டுவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:

வத்தலகுண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.1.25 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடத்துக்கும், கலைஞா் நகா்ப் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.71.49 லட்சத்தில் 8-ஆவது வாா்டு பகுதியில் சிமென்ட் சாலை, வடிகால் சிறுபாலம், தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

சி.எஸ்.ஆா். நிதி திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சத்தில் புதுப்பட்டி, காந்திநகரில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையங்களை திறக்கப்பட்டன.

வத்தலக்குண்டு பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.35.41 கோடியில் குடிநீா் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் வரும் 8.8.2025-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றாா் அவா்.

இதில் பேரூராட்சித் தலைவா் பா.சிதம்பரம், துணைத் தலைவா் இரா.தா்மலிங்கம், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) இரா.ராஜா, பேரூராட்சி செயல் அலுவலா் ஆ.சரவணக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க