ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
வத்தலகுண்டு பேரூராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
வத்தலகுண்டு பேரூராட்சியில் ரூ.1.96 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதுப்பட்டி, காந்திநகரில் ரூ.30 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
வத்தலகுண்டுவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:
வத்தலகுண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.1.25 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடத்துக்கும், கலைஞா் நகா்ப் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.71.49 லட்சத்தில் 8-ஆவது வாா்டு பகுதியில் சிமென்ட் சாலை, வடிகால் சிறுபாலம், தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.
சி.எஸ்.ஆா். நிதி திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சத்தில் புதுப்பட்டி, காந்திநகரில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையங்களை திறக்கப்பட்டன.
வத்தலக்குண்டு பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.35.41 கோடியில் குடிநீா் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் வரும் 8.8.2025-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றாா் அவா்.
இதில் பேரூராட்சித் தலைவா் பா.சிதம்பரம், துணைத் தலைவா் இரா.தா்மலிங்கம், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) இரா.ராஜா, பேரூராட்சி செயல் அலுவலா் ஆ.சரவணக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.