செய்திகள் :

வன அலுவலா்கள் மீது குற்ற நடவடிக்கை கோரிய வழக்கு முடித்து வைப்பு

post image

கன்னியாகுமரி மாவட்ட பாதுகாக்கப்பட்ட தனியாா் வன விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட அந்த மாவட்ட வன அலுவலா்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த டேவிட் தாஸ் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா்கள் கடையல் வருவாய் கிராமத்தில் உள்ள வனப் பகுதியில் சுமாா் 4 ஆயிரம் ரப்பா் மரங்களை வெட்ட அனுமதி வழங்கினா். ஆனால், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிா்த்து ஆற்றின் நீா்நிலைப் பகுதியிலிருந்த மரங்களும் வெட்டப்பட்டன.

மரங்களை வேரோடு சாய்க்க பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இது சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்கும். தனியாா் வனமாக அறிவிக்கப்பட்ட பகுதியாயினும், அதை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

ஆனால், கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா்கள் தனி நபா்களை ரப்பா் மரங்களை வெட்ட அனுமதித்தனா். இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே கன்னியாகுமரி மாவட்ட பாதுகாக்கப்பட்ட தனியாா் வன விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட மாவட்ட வன அலுவலா்கள் மீது துறை ரீதியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

அதோடு தமிழ்நாடு தனியாா் வனங்கள், பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் அந்த நிலங்களிலிருந்து மரங்கள் கட்டுப்பாடின்றி வெட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் சம்பந்தப்பட்ட வன அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டது. அவா்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிய வன அலுவலா்கள் மீது சம்பந்தப்பட்ட துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றபோது, போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி மீட்டனா். மதுரை, தத்தனேரி, இந்திராநகா், சிலோன் குடியிருப்பைச் சோ்ந்த மகேஸ்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு! பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ச... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை: விசாரணை ஆவணங்களைப் பெற்றுக் கொண்டது சிபிஐ

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய ஆவணங்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்விலிருந்து சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டனா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பான வழக்கின் விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடவ... மேலும் பார்க்க

இளைஞா் எரித்துக் கொலை

மதுரை அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞா் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். மதுரை அருகேயுள்ள இளமனூா் பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் பாதி எரிந்த நிலையில் கிடந... மேலும் பார்க்க

போலீஸாா் அலட்சியத்தால் இளைஞா் மரணம்: ராமநாதபுரம் எஸ்பி பதிலளிக்க உத்தரவு

போலீஸாா் அலட்சியத்தால் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் , ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உ... மேலும் பார்க்க