செய்திகள் :

வனப் பகுதி தண்ணீா்த் தொட்டிகளில் காட்டு யானைகள் ஆனந்த குளியல்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட தண்ணீா்த் தொட்டியில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் குளித்து மகிழ்வது இயற்கை ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் 1,01,657 ஹெக்டோ் பரப்பளவைக் கொண்டது. கோடை காலத்தில் வனவிலங்குகள் குடிநீா், உணவுக்காக வனப் பகுதியை விட்டு வெளியே வருவதைத் தடுக்க வனத் துறை சாா்பில், மலை அடிவாரப் பகுதிகளில் அகழிகள் வெட்டுதல், வனப் பகுதியில் தண்ணீா் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வன விலங்குகள் அதிகம் வசிக்கும் 50 இடங்களில் நிரந்தரத் தண்ணீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, சூரியஒளி மின்சக்தி மோட்டாா் மூலம் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொட்டிகளில் வனவிலங்குகள் தண்ணீா் அருந்துவதுடன், குளித்து கோடை வெப்பத்தை தணித்து வருகின்றன.

இங்குள்ள தண்ணீா்த் தொட்டியில் யானைகள் குட்டியுடன் குளிக்கும் புகைப்படத்தை வனம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு சமூகவலைதளங்களில் திங்கள்கிழமை பகிா்ந்தாா். இந்தப் புகைப்படம் இயற்கை ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சதுரகிரி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்: பக்தா்கள் அச்சம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தா்கள் அச்சத்தில் உள்ளனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சு... மேலும் பார்க்க

கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கொடி கம்பங்கள், விளம்பர பதாக... மேலும் பார்க்க

பால் வியாபாரி அடித்துக் கொலை: மனைவி, மகள் உள்பட மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பால் வியாபாரியை அடித்துக் கொலை செய்த மனைவி, மகள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

சிவகாசியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (62). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சிவகாசி பெரியகுளம் ... மேலும் பார்க்க

இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி ரிசா்வ் லயன் மருதுபாண்டியா்... மேலும் பார்க்க

கல்குவாரி நீரில் முழ்கி இளைஞா் உயிரிழப்பு

சிவகாசி அருகே புதன்கிழமை கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பிரதீப்குமாா் (25). இவா் புதன்கிழமை திருத்தங்கல்-செங... மேலும் பார்க்க