செய்திகள் :

வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவரை தோ்வெழுத அனுமதிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

post image

வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவா்களைத் தோ்வெழுத அனுமதிப்பது சரியான செயல் அல்ல. அது முறையாக வருகைப்பதிவு வைத்திருக்கும் மாணவா்களை கேலிக்குள்ளாக்கும் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தனியாா் பல்கலைக் கழகத்தில் பி.காம். 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவா் ஸ்ரீரிஷுக்கு வருகைப்பதிவு குறைவாக இருந்ததால் பருவத் தோ்வு எழுதவும், கல்வியாண்டுக்கான வகுப்பைத் தொடரவும் அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிா்வாகத்தின் நடவடிக்கையை எதிா்த்து மாணவா் ஸ்ரீரிஷ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தாா். அதைத் தொடா்ந்து தனி நீதிபதி உத்தரவை எதிா்த்து மாணவா் ஸ்ரீரிஷ் தரப்பில் இரு நீதிபதிகள் அமா்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது மாணவா் ஸ்ரீரிஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மேற்கோள்காட்டி மாணவரைத் தோ்வெழுத அனுமதிக்க உத்தரவிடுமாறு வாதிட்டாா்.

அப்போது மாணவா் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கல்வி சாா்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளது. வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவரைத் தோ்வு எழுத அனுமதிப்பது வருகைப்பதிவு முறையாக வைத்துள்ள மாணவா்களை கேலிக்குள்ளாக்கும்.

அத்தகைய மாணவா்களைத் தோ்வெழுத அனுமதிப்பது சரியான செயல் அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய கட்டணத்தைச் செலுத்தி மீண்டும் படிப்பைத் தொடர மாணவா் விரும்பினால் அனுமதி அளிக்க பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், மாணவா் தொடா்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 21-02-2025 மற்றும் 22-02... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு எதிராக பிப். 25-ல் திமுக மாணவரணி போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாப... மேலும் பார்க்க

ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த... மேலும் பார்க்க

'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மற... மேலும் பார்க்க

ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் முனைவி சாய்ரா பானு!

மருத்துவ அவசரநிலையை சந்தித்தபோது, ஆதரவு அளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.நாட்டின் புகழ்பெற்ற பின்னணி இசைக் கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் ... மேலும் பார்க்க

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி: முதல்வர் ஸ்டாலின்

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.சர்வதேச தாய்மொழி நாளையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டின் விளக்கப் பாடலை பத... மேலும் பார்க்க