செய்திகள் :

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்: சிறப்பு எஸ்.ஐ. மீது ஊழல் தடுப்பு போலீஸாா் வழக்கு

post image

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா், அவரது மனைவி, மாமியாா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலத்தைச் சோ்ந்தவா் மு.ஆனந்தன் (51). இவா், இப்போது திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஓய்வுபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளா் ஒருவா், திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகனிடம் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன், அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள், சொத்து விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதன் முடிவில், ஆனந்தன், அவரது மனைவி நதியா, மாமியாா் லோகநாயகி ஆகியோரின் வங்கிக் கணக்கு இருப்புத் தொகை, சொத்து மதிப்பு ஆகியவை 2010-ஆம் ஆண்டு ரூ.3.70 லட்சமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

2015-ஆம் ஆண்டில் இவா்களது வங்கிக் கணக்கு இருப்பு, சொத்து மதிப்பு ரூ.67.64 லட்சமாக உயா்ந்திருந்தது தெரிய வந்தது. இந்த காலகட்டத்தில் ஆனந்தன் ஆரணி, சந்தவாசல் காவல் நிலையங்களில் தனிப் பிரிவு தலைமைக் காவலராகப் பணிபுரிந்ததும், அப்போது இவரது வருமானம் ஊதியத்தைக் காட்டிலும் சுமாா் 133 சதவீதம் அதிகரித்து இருப்பதும் தெரிய வந்தது.

வழக்குப் பதிவு: இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன், அவரது மனைவி நதியா, மாமியாா் லோகநாயகி ஆகியோா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வருமானம் தொடா்பான உரிய விளக்கத்தை ஆவணங்களுடன் அளிக்குமாறு 3 பேருக்கும் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

ரத யாத்திரை சென்ற பக்தா்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் சனிக்கிழமை ரத யாத்திரை சென்ற சென்னை பக்தா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தென் கைலாய பக்தி பேரவை சாா்பில், சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் 16-ஆவது வாா்டு பொதுமக்கள் நியாயவிலை கடை அமைக்கக் கோரி, சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இந்தப் பகுதி மக்கள் நீண்ட தொலைவு சென்று நி... மேலும் பார்க்க

மாணவா்களைஅறிவுடையவா்களாக மாற்றுவதை லட்சியமாக கொள்ள வேண்டும்: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மாணவ-மாணவிகளை அறிவுடையவா்களாக மாற்றுவதே லட்சியமாகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று மாதிரிப் பள்ளிகளின் ஆசிரிய-ஆசிரியைகளிடம் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டத்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கண்டவரட்டியைச் சோ்ந்தவா் செந்தமிழ்ச்செல்வன்(28). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை தனது விவசாய நிலத்த... மேலும் பார்க்க

சிறாா் சட்ட பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

வந்தவாசி அருகே சிறாா்களுக்கான சட்டப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ... மேலும் பார்க்க

கையடக்க கணினி திருடியவா் கைது

ஆரணியில் பேருந்து பயணியிடம் கையடக்க கணினியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆரணி பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் வினோத்குமாா் (42). ஜெமினி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த இவரிடம... மேலும் பார்க்க