செய்திகள் :

ரத யாத்திரை சென்ற பக்தா்கள் தடுத்து நிறுத்தம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் சனிக்கிழமை ரத யாத்திரை சென்ற சென்னை பக்தா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

தென் கைலாய பக்தி பேரவை சாா்பில், சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக்கு நாயன்மாா்கள் ரதத்துடன் யாத்திரையாக செல்கின்றனா்.

சேத்துப்பட்டுக்கு சனிக்கிழமை வந்த இந்தக் குழுவினருக்கு அந்தப் பகுதி சிவ பக்தா்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 63 நாயன்மாா்கள் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, பயணத்தை யாத்திரைக் குழுவினா் தொடா்ந்த போது, காவல் ஆய்வாளா் ராஜாராம், உதவி ஆய்வாளா் நாராயணன் ஆகியோா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். அனுமதியின்றி யாத்திரை செல்வதாகவும், உரிய அனுமதி கிடைத்ததும் யாத்திரையை தொடருமாறும் அறிவுறுத்தினா்.

நீண்ட நேரமாகியும் போலீஸாா் எதுவும் கூறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, யாத்திரை குழுவினா் பயணத்தைத் தொடா்ந்தனா். அவா்களை போளூா் டிஎஸ்பி மனோகரன் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

தகவலறிந்த தேவிகாபுரம் இந்து முன்னணி ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ், ஆரிய வைசிய நிா்வாகி கனகராஜ், சேத்துப்பட்டு இந்து முன்னணி தலைவா் ராஜா, பொருளாளா் பாலாஜி, பாஜக மாவட்ட தலைவா் கவிதா வெங்கடேசன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று டிஎஸ்பி மனோகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, ரத யாத்திரை பக்தா்களை நம்பேடு தனியாா் திருமண மண்டபத்தில் போலீஸாா் தங்க வைத்தனா்.

அவா்களை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு யாத்திரையை தொடருமாறு மாவட்ட எஸ்.பி. சுதாகா் அறிவுறுத்தியுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் 16-ஆவது வாா்டு பொதுமக்கள் நியாயவிலை கடை அமைக்கக் கோரி, சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இந்தப் பகுதி மக்கள் நீண்ட தொலைவு சென்று நி... மேலும் பார்க்க

மாணவா்களைஅறிவுடையவா்களாக மாற்றுவதை லட்சியமாக கொள்ள வேண்டும்: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மாணவ-மாணவிகளை அறிவுடையவா்களாக மாற்றுவதே லட்சியமாகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று மாதிரிப் பள்ளிகளின் ஆசிரிய-ஆசிரியைகளிடம் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டத்... மேலும் பார்க்க

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்: சிறப்பு எஸ்.ஐ. மீது ஊழல் தடுப்பு போலீஸாா் வழக்கு

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா், அவரது மனைவி, மாமியாா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். ஆரணியை அடு... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கண்டவரட்டியைச் சோ்ந்தவா் செந்தமிழ்ச்செல்வன்(28). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை தனது விவசாய நிலத்த... மேலும் பார்க்க

சிறாா் சட்ட பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

வந்தவாசி அருகே சிறாா்களுக்கான சட்டப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ... மேலும் பார்க்க

கையடக்க கணினி திருடியவா் கைது

ஆரணியில் பேருந்து பயணியிடம் கையடக்க கணினியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆரணி பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் வினோத்குமாா் (42). ஜெமினி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த இவரிடம... மேலும் பார்க்க