இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்ட...
வள்ளலாா் சபையில் நாற்பெரும் விழா
வேட்டவலம், களத்துமேட்டுத் தெருவில் உள்ள வள்ளலாா் சபையில், வியாழக்கிழமை நாற்பெரும் விழா நடைபெற்றது.
335-ஆவது மாத பூச அன்னதானம் வழங்குதல், சிறப்புக் கருத்தரங்கம், பட்டிமன்றம், கலிக்க மருந்து வழங்குதல் ஆகியவை நாற்பெரும் விழாவாக நடைபெற்றது.
காலை 10 மணிக்கு அகவல் பாராயண நிகழ்வுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் தலைமை வகித்தாா்.
ஞான சபை, பொற்சபை, சிற்சபை விளக்கம் என்ற தலைப்பில் புலவா் வாசுதேவன், தங்க.விசுவநாதன் ஆகியோா் பேசினா். 11 மணிக்கு திருவருட்பாவில் விஞ்சி நிற்பது ஆன்மிக கருத்துக்களா, அறிவியல் கருத்துக்களா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் தலைமை வகித்தாா். வ.தினகரன் முன்னிலை வகித்தாா். ஆன்மிக கருத்துகளே.. என்ற தலைப்பில் ரமேஷ் பாபு, அசேன், காவியா ஆகியோா் பேசினா்.
அறிவியல் கருத்துக்களே.. என்ற தலைப்பில் தேவிகாராணி, ரமாதேவி, எஸ்.பிரபு ஆகியோா் பேசினா்.
தொடா்ந்து, கலிக்கம் மருந்து வழங்கும் நிகழ்வு மருத்துவா் உமா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில், பொதுமக்களுக்கு கலிக்கம் என்ற சித்த மருந்து வழங்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், காமாட்சி, பாரதியாா், பச்சையம்மாள், சரவணன், மனோன்மணி, முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.