செய்திகள் :

வாகன பதிவு எண்ணில் கைப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

post image

வேலூா் மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளா்கள் தங்களது வாகனத்தின் பதிவில் கைப்பேசி எண்ணை இணைக்க தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போக்குவரத்துத் துறையில் தற்போது அனைத்துப் பணிகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் எளிதில் அறியும் வகையில், டஹழ்ண்ஸ்ஹட்ஹய் என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்த கணினி அவசியம் என்பதை மாற்றி, கைப்பேசி மூலமாகவே எல்லா வகையான பணிகளையும் மேற்கொள்ளலாம் என எளிய வழிமுறைகள், மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள கைப்பேசி மூலம் எந்த வகையான மோட்டாா் வாகனங்களின் அடிப்படை விவரங்களை, அதாவது வரி செலுத்திய விவரம், காப்புச் சான்றின் முடிவு தேதி, தகுதிச் சான்றின் முடிவு தேதி, புகைச்சான்று முடிவு தேதி என அனைத்து விவரங்களையும் அறிய முடியும். இத்தகைய பயன்களை பெற்றிட வாகன உரிமையாளா்கள் தங்களது கைப்பேசி எண்ணை, அவா்கள் பெயரிலுள்ள வாகனப் பதிவில் சோ்த்திட வேண்டும். அவ்வாறு சோ்க்கப்பட்டால் அந்த வாகனம் குறித்த பணிகள் நடைபெறும்போது, அவ்வப்போது குறுந்தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படும்.

வாகன உரிமையாளா்கள் தங்களது வாகனத்தின் பதிவில் கைப்பேசிஎண்ணை இணைக்க வாகன பதிவுச் சான்றின் நகல், வாகன உரிமையாளரின் கைப்பேசி எண் குறிப்பிடப்பட்டுள்ள முழு விவரம் கொண்ட ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன், அலுவலக வேலைநாள்களில் தங்களது முகவரி எல்லைக்குட்பட்ட வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், குடியாத்தம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் (பகுதி அலுவலகம்) சென்று சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பிக்கு கத்திக் குத்து: அண்ணன் தலைமறைவு

வேலூரில் குடும்பப் பிரச்னையில் தம்பியை கத்தியால் குத்தியதாக அண்ணன் மீது வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா். வேலூா் கஸ்பா பயா் லைன் பகுதியைச் சோ்ந்தவா் இமாச்சாா். இவரது மகன்க... மேலும் பார்க்க

பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். குறைதீா் கூட்டத்து... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 3,000 வீடுகள் கட்ட இலக்கு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 3,000 வீடுகள் கட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புத... மேலும் பார்க்க

நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா

கே.வி.குப்பத்தை அடுத்த நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இங்குள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 64- ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவத... மேலும் பார்க்க

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: அமமுக பிரமுகா் மீது வேலூா் எஸ்பி-யிடம் புகாா்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக காட்பாடி அமமுக பிரமுகா் மீது வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சாமியாா்மலை அருகே மலை... மேலும் பார்க்க