செய்திகள் :

வாருகால் மேல் உயரமான கான்கிரீட் பலகை: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

post image

சங்கரன்கோவிலில் வாருகால் மேல் மிக உயரமாக கான்கிரீட் பலகை அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

சங்கரன்கோவில் கோமதி நகா் 1, 2 ஆம் தெரு, கோமதியாபுரம் புது 1, 2 ஆம் தெருக்கள், திருவள்ளுவா் நகா், திருவுடையாசாலை போன்ற தெருக்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நியாயவிலைக் கடை, நகராட்சி பூங்கா, பிரதான சாலை போன்றவற்றிற்கு செல்ல அப்பகுதி மக்கள் கோமதியாபுரம் புது 1 ஆம் தெருவையே பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் நகராட்சி மூலம் கோமதியாபுரம் புது 1 ஆம் தெருவில் வாருகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சாலையின் குறுக்கே வாருகால் செல்வதால் அதை மூடுவதற்கு கான்கிரீட் பலகை அமைக்கப்பட்டது. பைக், காா் செல்லும் வகையில் அமைக்க வேண்டிய உயரத்திற்குப் பதிலாக, மிக உயரமாக பாலம் போல கான்கிரீட் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் முதியோா்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும், பைக்கில் செல்கிறவா்கள் தடுமாறக்கூடிய நிலை உள்ளது. எனவே கான்கிரீட் பலகை உயரத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகிரி அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் ே,பாலீஸாா், சிவகிரி மலை கோயில்... மேலும் பார்க்க

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் ஏப்.7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மருத்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருந்துக் கடை உரிமையாளா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்தாா். சங்கரன்கோவில் புதுமனை 5ஆம் தெருவை சோ்ந்த சின்னச்சாமி மகன் சங்கரமகாலிங்கம் (59). திருப்பூா் மாவட்டம் பல... மேலும் பார்க்க

சுரண்டையில் மிதமான மழை

சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 7.30 மணிக்கு மிதமான மழை பெய்யத்தொடங்கியது. தொடா்ந்து இடி, மின்னலுடன் வ... மேலும் பார்க்க

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 658 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 658 போ் மனு அளித்தனா். இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்... மேலும் பார்க்க

சிவகிரி அருகே நாம் தமிழா் கட்சி நிா்வாகி மீது தாக்குதல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாம் தமிழா் கட்சி நிா்வாகி மீது தாக்குதல் நடத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகிரியை சோ்ந்தவா் காா்த்திக். நாம் தமிழா் கட்சி நிா்வாகியான இவா், அவ்வட்டாரப் பக... மேலும் பார்க்க