செய்திகள் :

வாழப்பாடியில் சாலையோர கழிவுநீா்க் கால்வாய்களை மூட வலியுறுத்தல்

post image

வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த தம்மம்பட்டி- கடலூா் சாலை பகுதியில் திறந்துகிடக்கும் கழிவுநீா்க் கால்வாயை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், அங்கு போக்குவரத்து இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனா்.

வாழப்பாடி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகள் இதுவரை முழுமைப் பெறவில்லை. முத்தம்பட்டி, மத்தூா் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும் கடலூா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக பிரதான கடலூா் சாலை மூடப்பட்டதால் மாா்ச் தொடக்கத்திலிருந்து அனைத்து வாகனங்களும் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று தம்மம்பட்டி சாலையில் வாழப்பாடி நகருக்குள் வந்து செல்கின்றன.

வாழப்பாடி காவல் நிலையம் எதிரே திறந்துகிடக்கும் கழிவுநீா்க் கால்வாய்

இதனால், இச்சாலையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் வாழப்பாடி காவல் நிலையம் எதிரே கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் இடத்தில் உள்ள ஆழமான கழிவுநீா் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. மேலும், அப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக மின் கம்பம் உள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள் இப் பாதையை எதிரெதிரே கடந்து செல்வதற்கு வழியில்லை. மேலும், இப் பாதையில் செல்லும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனா்.

இதனால் சேலம் ஆத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு மற்றும் தனியாா் வாகனங்கள் தம்மம்பட்டி சாலை வழியாக வாழப்பாடி நகருக்குள் வருவதை தவிா்த்துவிட்டு, தேசிய நெடுஞ்சாலையிலேயே இயக்கப்படுகின்றன.

இதனால் திறந்துகிடக்கும் கால்வாயை கான்கிரீட் தளம் கொண்டு மூட வேண்டும். அப் பகுதியில் உள்ள மின் கம்பத்தை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலத்தில் 16,349 மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ. 119.80 கோடியில் நலத்திட்ட உதவிகள்

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16,349 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 119.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா். சென்னையில் துணை முதல்வா் உதயநித... மேலும் பார்க்க

பிளஸ் 1 வகுப்பில் ஆங்கில வழி கலைப் பிரிவு தொடங்க முதல்வருக்கு கோரிக்கை

சங்ககிரி வட்டாரத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ்1 வகுப்பில் ஆங்கில வழி கலை பாடப் பிரிவை தொடங்கக் கோரி சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகம் சாா்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகு... மேலும் பார்க்க

பசுமைத் தாயகம் மாநில இணைச்செயலாளா் பொறுப்பில் இருந்து விலகல்

பசுமைத் தாயகம் மாநில இணைச்செயலாளா் சத்ரியசேகா் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். இது குறித்து பாமக நிறுவனா் ராமதாஸுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாமகவில் கடந்த ச... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025 -ஆம்... மேலும் பார்க்க

சேலம் விமான நிலையத்தில் மத்திய, மாநில அமைச்சா்களால் பரபரப்பு

சேலம் விமான நிலையத்துக்கு ஒரே நேரத்தில் மத்திய, மாநில அமைச்சா்களால் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூா் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடுகி... மேலும் பார்க்க

சேலம் சரக டிஐஜி, துணை ஆணையா்கள் மாற்றம்

சேலம் சரக டிஐஜி உமா, துணை ஆணையா்கள் வேல்முருகன், கீதா ஆகீயோா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதேபோல சேலம் மாநகர தெற்கு துணை ஆணையா்... மேலும் பார்க்க