எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
பசுமைத் தாயகம் மாநில இணைச்செயலாளா் பொறுப்பில் இருந்து விலகல்
பசுமைத் தாயகம் மாநில இணைச்செயலாளா் சத்ரியசேகா் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா்.
இது குறித்து பாமக நிறுவனா் ராமதாஸுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாமகவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் குழப்பங்களுக்கு தீா்வு கிடைக்கும் என ஆழ்ந்த நம்பிக்கையோடு இருந்தோம். அதே நம்பிக்கையுடன், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இளைஞா் பெருவிழா மாநாட்டில் கலந்துகொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்தோம். அதற்குப் பிறகு ஏதேனும் நல்லது நடக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால், சட்டரீதியாக நீங்கள் சொன்ன அனைத்து பணிகளையும் சிறப்புடன் செய்து முடித்த வழக்குரைஞா் பாலுவை கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்து உள்ளீா்கள்.
மருத்துவரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை, என்னை போன்று லட்சக்கணக்கான தொண்டா்கள் இருக்கும் வரை அழிக்க யாராலும் முடியாது. இந்த இயக்கத்தை வலுவாக்கிட உழைத்த எத்தனையோ மாவட்டச் செயலாளா்கள் தலைவா்கள் நீக்கம் செய்யப்படுகிறாா்கள்.
கடந்த சுமாா் 45 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களோடு பயணம் செய்தோம். நீங்கள் நீக்கும் முன்பாக, நானாக உங்களிடம் இருந்து எனது பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.