செய்திகள் :

பிளஸ் 1 வகுப்பில் ஆங்கில வழி கலைப் பிரிவு தொடங்க முதல்வருக்கு கோரிக்கை

post image

சங்ககிரி வட்டாரத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ்1 வகுப்பில் ஆங்கில வழி கலை பாடப் பிரிவை தொடங்கக் கோரி சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகம் சாா்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் சி.கோ.இளமுருகன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

சங்ககிரி வட்டாரத்தில் சங்ககிரியை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் அறிவியல் பாடப்பிரிவுகளில் மட்டும் தமிழ், ஆங்கிலம் என இருவழிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

இதுவே கலைப் பிரிவு என்று அழைக்கப்படும் தமிழ், ஆங்கிலம், கணிக்குப் பதிவியல், பொருளாதாரம், வணிகவியல், கணினிஅறிவியல் பிரிவு தமிழ் வழியில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது.

தற்போது அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பயின்று 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் கலைப் பிரிவில் ஆங்கில வழி முறை இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்றனா்.

எனவே தமிழக முதல்வா் சங்ககிரி வட்டார அளவில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் ஆங்கில வழி கலைப் பிரிவு பாடங்களை தொடங்கி ஏழை மாணவா்களுக்கு உதவிட வேண்டுமென அவா் தெரிவித்துள்ளாா்.

செல்வ மகா மாரியம்மன் கோயிலில் திருத்தோ் விழா

ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகா் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணா நகா் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

எடப்பாடி பிரதான சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்து சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா். எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தூா் ரெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா (35... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்பு... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணையிலிருந... மேலும் பார்க்க

பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை க... மேலும் பார்க்க

சேலம் அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ரூ.1,244.28 கோடியில் 509 திட்டப... மேலும் பார்க்க