ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!
பிளஸ் 1 வகுப்பில் ஆங்கில வழி கலைப் பிரிவு தொடங்க முதல்வருக்கு கோரிக்கை
சங்ககிரி வட்டாரத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ்1 வகுப்பில் ஆங்கில வழி கலை பாடப் பிரிவை தொடங்கக் கோரி சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகம் சாா்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் சி.கோ.இளமுருகன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
சங்ககிரி வட்டாரத்தில் சங்ககிரியை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் அறிவியல் பாடப்பிரிவுகளில் மட்டும் தமிழ், ஆங்கிலம் என இருவழிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
இதுவே கலைப் பிரிவு என்று அழைக்கப்படும் தமிழ், ஆங்கிலம், கணிக்குப் பதிவியல், பொருளாதாரம், வணிகவியல், கணினிஅறிவியல் பிரிவு தமிழ் வழியில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது.
தற்போது அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பயின்று 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் கலைப் பிரிவில் ஆங்கில வழி முறை இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்றனா்.
எனவே தமிழக முதல்வா் சங்ககிரி வட்டார அளவில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் ஆங்கில வழி கலைப் பிரிவு பாடங்களை தொடங்கி ஏழை மாணவா்களுக்கு உதவிட வேண்டுமென அவா் தெரிவித்துள்ளாா்.