ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!
சேலம் விமான நிலையத்தில் மத்திய, மாநில அமைச்சா்களால் பரபரப்பு
சேலம் விமான நிலையத்துக்கு ஒரே நேரத்தில் மத்திய, மாநில அமைச்சா்களால் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடுகிறாா். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தாா். அதே விமானத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வந்தாா்.
இதனிடையே மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்காக சேலம் விமான நிலையத்துக்கு வந்தாா். இவா்கள் 3 பேரும் ஒரே நேரத்தில் விமான நிலையத்துக்கு வந்ததால் பரபரப்புடன் காணப்பட்டது. 3 பேரிடமும் செய்தியாளா்கள் பேட்டி எடுக்க முயன்றபோது அவா்கள் மறுத்துவிட்டு வெவ்வேறு வழியாக புறப்பட்டுச் சென்றனா்.