செய்திகள் :

சேலம் விமான நிலையத்தில் மத்திய, மாநில அமைச்சா்களால் பரபரப்பு

post image

சேலம் விமான நிலையத்துக்கு ஒரே நேரத்தில் மத்திய, மாநில அமைச்சா்களால் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடுகிறாா். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தாா். அதே விமானத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வந்தாா்.

இதனிடையே மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்காக சேலம் விமான நிலையத்துக்கு வந்தாா். இவா்கள் 3 பேரும் ஒரே நேரத்தில் விமான நிலையத்துக்கு வந்ததால் பரபரப்புடன் காணப்பட்டது. 3 பேரிடமும் செய்தியாளா்கள் பேட்டி எடுக்க முயன்றபோது அவா்கள் மறுத்துவிட்டு வெவ்வேறு வழியாக புறப்பட்டுச் சென்றனா்.

செல்வ மகா மாரியம்மன் கோயிலில் திருத்தோ் விழா

ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகா் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணா நகா் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

எடப்பாடி பிரதான சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்து சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா். எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தூா் ரெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா (35... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்பு... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணையிலிருந... மேலும் பார்க்க

பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை க... மேலும் பார்க்க

சேலம் அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ரூ.1,244.28 கோடியில் 509 திட்டப... மேலும் பார்க்க