அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2025 -ஆம் ஆண்டில் சேலம் (மகளிா்), மேட்டூா் அணை மற்றும் கருமந்துறை (பழங்குடியினா்) ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களான சேலம் பாலிடெக்னிக் ஐடிஐ, சேலம் மற்றும் வேல்ஸ் ஐடிஐ, மேட்டூா் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் அணுகவும்.
மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், கைபேசி எண், ஆதாா் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகிய அசல் ஆவணங்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள சோ்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். பயிற்சி பெறுபவா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750 பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக் கருவி, காலணி, பேருந்து பயண அட்டை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளா்களுக்கும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளா்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் பயிற்சி முடித்த பின் அரசு மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14 மற்றும் வயது உச்ச வரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை ஆகும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய வரும் 13 ஆம் தேதி கடைசி நாளாகும்.
சோ்க்கை தொடா்பாக கோரிமேடு, அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.