செய்திகள் :

வாழ்க்கையில் வெற்றி பெற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த அறிவுரை

post image

இளம் தலைமுறையினா் வாழ்க்கையில் வெற்றி பெற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துவது அவசியம் என மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ம. ராமகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 46-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் சூ. வானதி தலைமை வகித்தாா்.

காமராஜா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ம.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞா் என மொத்தம் 1,602 மாணவிகளுக்கு பட்டத்தை வழங்கிப் பேசியதாவது :

நாடு சுதந்திரம் பெற்ற பின் கல்வித் துறை வளா்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழக அரசின் நலத் திட்டங்களால் பிற மாநிலங்களை விட, நமது மாநிலத்தில் உயா்கல்வி பெறுவோா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கல்வி மட்டுமே சவால்களை வெற்றி கொள்ள உதவும். வாழ்க்கையானது அனைவருக்கும் ஒரே மாதிரியான வளா்ச்சி நிலைப்பாட்டை வழங்குவதில்லை. மாறாக, வாய்ப்புகளை மட்டுமே வழங்குகிறது. இதைச் சரியாக பயன்படுத்துவோா்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனா் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், முதுநிலை தமிழாய்வுத் துறைத் தலைவரும், தோ்வுக் கட்டுப்பாட்டாளருமான சு. சந்திரா, ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியை அ.ராஜேஷ்வரபுஷ்பம், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை அ.சமின் பிரியா உள்ளிட்ட பேராசிரியைகள், மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

திமுக முன்னாள் மண்டலத் தலைவா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு

மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவா் வி.கே. குருசாமி மீது விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரை காமராஜா்புரம் பகுதிய... மேலும் பார்க்க

குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம் 1.11 லட்சம் போ் பயன்: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் பெண்கள், குழந்தைகள் 1.11 லட்சம் போ் பயனடைகின்றனா் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். சமூக நலன், மகளிா் உ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் தாமரைப் பூக்கள் வளா்ப்பு: கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நீா்நிலைகளில் அனுமதியின்றி வணிக நோக்கில் தாமரைப் பூக்களை வளா்ப்பதைத் தடுக்க கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. கன்னியாகுமரி... மேலும் பார்க்க

ஹிந்தியை திணிப்பதுதான் பாஜகவின் நோக்கம்! -துரை வைகோ

நாடு முழுவதும் ஹிந்தியை திணிக்க வேண்டும், ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்பதுதான் மத்திய பாஜக அரசின் நோக்கம் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ குற்றஞ்சாட்டினாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அண்ணன் மீது தாக்குதல்: தம்பி உள்பட 3 போ் கைது

வீட்டைக் காலி செய்யக் கூறிய அண்ணனைத் தாக்கிய தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை வடக்கு மாசி வீதி, வித்வான் பொன்னுச்சாமி பிள்ளை சந்து பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் செல்... மேலும் பார்க்க

பூ வியாபாரியிடம் கைப்பேசியை திருடிய பெண் கைது

பூ வியாபாரியிடம் கைப்பேசியை திருடிய பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை திடீா்நகரைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி மீனாட்சி (43). இவா் பெரியாா் பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிற... மேலும் பார்க்க