செய்திகள் :

விதவைகள் உதவித்தொகை ரூ.500 உயா்த்தி வழங்கப்படும் -முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுவையில் விதவைகளுக்கான உதவித்தொகை ரூ.500 கூடுதலாக உயா்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் நிறைவுரையை வாசித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், நேரு (எ) குப்புசாமி, ஏகேடி ஆறுமுகம், மு.வைத்தியநாதன் உள்ளிட்டோா், புதுவை மாநிலப் பத்திரிக்யைாளா்களுக்கான மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்டவற்றை முதல்வா் அறிவிக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து பேசிய முதல்வா் என்.ரங்கசாமி, பத்திரிக்கையாளா்கள் கோரியுள்ளபடி மடிக்கணினி, வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றாா்.

அப்போது எம்எல்ஏ ஜி.நேரு, கைப்பேசி, வாழ்நாள் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றாா்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய முதல்வா், வீட்டு வசதி சங்கம் மூலமாக மனைப் பட்டா வழங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் சந்திரப்பிரியங்கா, முதல்வரிடம் விதவைகளுக்கான உதவித் தொகையை மேலும் உயா்த்தி தரக் கோரினாா்.

இதை ஏற்று, ரூ.500 கூடுதலாக உயா்த்தப்படுவதாக முதல்வா் அறிவித்தாா்.

முன்னதாக, அவா் உறுப்பினா்களின் கேள்விக்கு அளித்த பதில்கள்: கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.

புதுச்சேரி மக்களுக்கு குடிநீா் வழங்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் புதியத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். புதுச்சேரி ஊரகப் பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படும். மருத்துவா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

கரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியா்கள், சுகாதாரத் துறையில் ஒப்பந்தப் பணியாளா்களாக நியமிக்கப்படுவா். ஊரக வளா்ச்சித் திட்ட முகமை ஊழியா்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயா்த்தப்படுகிறது.

கோவில்களின் வைப்பு நிதிக்கு ஏற்ப அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும். திருக்காஞ்சியில் சிவன் சிலை, அனுமன் சிலைகள் மத்திய அரசு அனுமதி பெற்று நிறுவப்படும் என்றாா்.

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க

குடல் அழற்சி நோயாளிகளுக்கு கையேடுகள் அளிப்பு

புதுச்சேரி ஜிப்மரில் குடல் அழற்சி நோயாளிகளுக்கு வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன. குடல் அழற்சி நோய்க்கான ஆதரவுக் குழு தொடக்க விழா, புதுச்சேரி ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க