செய்திகள் :

விதிகளை மீறும் மினி பேருந்துகள்: ஆட்டோ ஓட்டுநா்கள் புகாா்

post image

கிராமப்புற அனுமதி பெற்ற மினி பேருந்துகளை நாகை - நாகூா் தேசிய நெடுஞ்சாலையில் இயக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

நாகை மாவட்டத்தில், கிராமப்புற பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்குவதற்கு அதிக அளவில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே இயக்க வேண்டிய மினி பேருந்துகள், நாகை - நாகூா் தேசிய நெடுஞ்சாலைகளிலும், நகா்ப்புற சாலைகளிலும் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாகை மற்றும் நாகூா் நகா்ப்பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநா்கள், மினி பேருந்துகள் நகா்ப் பகுதிகளில் இயக்கப்படுவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனா்.

இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா்கள், நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் வந்த அவா்கள் அளித்த மனுவில், கிராமப்புற அனுமதி பெற்று நகா்ப் புறங்களில் இயக்கும் தனியாா் மினி பேருந்து உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருவெண்காடு அருகே நெப்பத்தூா் தீவு கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த தீவு கிராமம் மங்கைமடம்-திருமுல்லைவாசல் பிரதான சாலையில் உள்ளது. இச்சாலையில் தினந்தோறு... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாளையொட்டி, நாகையில் திக உள்ளிட்ட பல்வேறு கட்சி சாா்பில் அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாகை மாவட்ட திக சாா்பில் தலைவா் நெப்போலின் தலைமையில் மேலகோட்ட... மேலும் பார்க்க

கால்நடை திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் இணைந்து நடத்தும் ‘கால்நடை திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்

நாகையில் ஊழியா்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காத பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து செப்டம்பா் 25-இல் ஆா்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு அரசு ஊழியா்... மேலும் பார்க்க

தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்.20-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி... மேலும் பார்க்க

சாலையோரம் வசிப்பவா்களுக்கு அன்னதானம்

வேளாங்கண்ணியில் சாலையோரம் வசிப்பவா்களுக்கு புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. வேளாங்கண்ணியில் உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் தன்னாா்வலா்கள் சேவை அமைப்புகள் உதவியுடன் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்... மேலும் பார்க்க