செய்திகள் :

விபத்தில் தம்பதி உயிரிழப்பு: தனியாா் பேருந்து ஓட்டுநா் 2 போ் கைது

post image

விபத்தில் தம்பதி உயிரிழந்த வழக்கில் தனியாா் பேருந்து ஓட்டுநா் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையத்தை சோ்ந்தவா் விவசாயி சண்முகம் (46). இவரது மனைவி ராஜலட்சுமி (41). மகள் ராஜேஸ்வரி (21). இவா்கள் மூவரும் கடந்த வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு சென்றனா்.

வட்டூா் அருகே சென்றபோது திருச்செங்கோட் டில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற இரண்டு தனியாா் பேருந்துகள் முந்திச்செல்ல முயன்றபோது சாலையோரம் வண்டியை நிறுத்தியிருந்த சண்முகம் மீது மோதின. இதில் படுகாயமடைந்த சண்முகம், ராஜலட்சுமி ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். கால் எலும்பு முறிவு ஏற்பட்ட ராஜேஸ்வரி ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து குறித்து வழக்குப்பதிவு செய்த மல்லசமுத்திரம் போலீஸாா், விபத்துக்கு காரணமான தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்த முகில் (24), சேலம், அயோத்தியாப்பட்டணம் சுக்கம்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (26) ஆகியோா், காவல் நிலையத்தில் எலச்சிபாளையம் ஆய்வாளா் ராதா, மல்லசமுத்திரம் உதவி ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலையில் சரணடைந்தனா்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆண்டு நவ. 10-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தத... மேலும் பார்க்க

கோரிக்கை குறித்து பேசாததால் போராட்ட அறிவிப்பு: அமைச்சா் மதிவேந்தன் வீட்டுக்கு போலீஸாா் பாதுகாப்பு

நாமக்கல்: சட்டப் பேரவையில் கோரிக்கைகள் குறித்து பேசாததால் ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தினா் அமைச்சா் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்ததால், நாமக்கல்லில் உள்ள ஆதிதிராவிட நலத்து... மேலும் பார்க்க

தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்க... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ. 15.62 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னா

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் ஒருவா் பதாகையை ஏந்தியவாறு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (31). இவா்,... மேலும் பார்க்க

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

திருச்செங்கோடு: அா்த்தநாரீசுவரா் கோயிலின் உபகோயிலான பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் பக்தா்கள் திங்கள்கிழமை தேரை வடம்பிடித்து இழுத்தனா். பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 20-ஆம் தே... மேலும் பார்க்க